குட்டீஸ் குறும்பு ! கண்ணாடி காலி... கடவுள் தப்பிச்சார்! பயங்கர சுட்டியான என் பையனும், அவன் ஃப்ரெண்டும் சேர்ந்து விளையாடும்போது, பந்தை உருட்டிவிட்டு ஒரு சாமி படத்தை உடைத்துவிட்டனர். மூன்று கடவுள்கள் இணைந்திருந்த அந்தப் படத்தின் கண்ணாடி ஃப்ரேம் உடைந்து போய் கிடைக்க, நான் கோபமாகப் பார்த்தேன். உடனே என் மகன் என்னிடம் ஓடி வந்து, ''அம்மா... கண்ணாடிதான் உடைஞ்சுச்சு... சாமி எல்லாரும் அப்படியேதான் இருக்காங்க... அவங்களுக்கு ஒண்ணும் ஆகல...'' என்று என்னைச் சமாதானப்படுத்த, கோபம் மறைந்து சிரிப்பு தொற்றிக் கொண்டது. கூடவே... ''ஒருவேளை சாமி மேல பால் பட்டிருந்ததுனா, அவருக்கு காயம் ஆகியிருக்கும், அப்புறம் அவர் ஸ்கூலுக்கு லீவ் போடணும். ஆமாதானேம்மா..?!'' என்று அவன் அடுக்கிக்கொண்டே போக, சின்னச் சிரிப்பு பெரிதானது எனக்கு! - கோ.ரேவதி, சங்கராபுரம் வாங்க சாமி... போங்க சாமி! ஒன்றாம் வகுப்புப் படிக்கும் என் மகள் சிவாத்மிகா, என்னையும் அவள் அப்பாவையும் 'வாங்க, போங்க’ என்றுதான் பேசுவாள்.. . .
முப்பது வருடம் முன்பு நடந்திருந்தாலும் சீதா கண்ணனின் மகன் "எலே... விழுந்து கும்பிடுலே!! ஐயா சொல்லுதாங்கள்ல..." என்று இயல்பாக சொன்னதை படித்த்போது கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும் அளவு சிரிப்பு வந்து விட்டது.
COMMENT(S): 4
Seetha kannan experience very nice.. ROFL.!!
'எலே... விழுந்து கும்பிடுலே'
ம்ம். இது குழந்தையின் புத்திக் கூர்மையைக் காட்டுகிறது, குறும்பு என்று எனக்குத் தோன்றவில்லை!
சீதா கண்ணன் : அருமை.
முப்பது வருடம் முன்பு நடந்திருந்தாலும் சீதா கண்ணனின் மகன் "எலே... விழுந்து கும்பிடுலே!! ஐயா சொல்லுதாங்கள்ல..." என்று இயல்பாக சொன்னதை படித்த்போது கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும் அளவு சிரிப்பு வந்து விட்டது.