மயிலிறகு மனசு ! சும்ஸ்’ என்று என்னைச் செல்லமாய்க் கூப்பிடும் மலர்மாலா, எனக்கு 25 ஆண்டு காலப் பழக்கம். மதுரை, தியாகராசர் கல்லூரியில் எனக்கு சீனியர். சில வருட வயது வித்தியாசமென்பதால் நல்லதொரு மேய்ப்பராக எங்கள் குழுவை வழிநடத்திய அவளை, நாங்கள் 'மொழு மொழு’ என்றே கூப்பிடுவோம். பெயருக்கு ஏற்றாற்போல எப்பொழுதுமே பூசினாற் போன்றதொரு உடல்வாகு அவளுக்கு. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான போடிநாயக்கனூரில்இருந்து, மதுரைக்கு முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க வந்த அவளுக்கும், எனக்குமான நட்பு... சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டதொரு அபூர்வமான உறவு. மதுரை, தெப்பக்குளத்துக்கு அருகிருந்த கல்லூரி மகளிர் விடுதிக்கு நான் சென்று சேர்ந்தபோது, பார்த்த களையான முதல் முகம் அவளுடையதுதான். எனது பெரிய ஊதா நிற சூட்கேசையும், நீண்ட ஜிமிக்கிகளையும், ஆங்கில உச்சரிப்பையும் பார்த்துக் கொஞ்சம் மிரண்டுவிட்டதாக பின்னர் என்னிடம் சொன்னாள். வாழ்வின் திரும்பக் கிடைக்காத நாட்காட்டியின் தாள்களை ஒவ்வொன்றாக அவளுடன் சேர்ந்தே நான் இனிமையாகக் கிழித்தேன். 'மொழு மொழு’ எனும் பட்டப். . .
COMMENT(S): 7
இவருடைய கணவர் யார் என்றும், என்ன செய்கிறார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் . சாந்தா
அப்பாடா ஒரு வழியாக தீர்ந்தது
கனிமொழி உங்க தோழி இல்லையா...???? arasial ithu ellam satharanampa...!!!
அருமையான தொடர்.
நட்பின் ஆழத்தைவிட சுயப்பிரதாபம்தான் அதிகமாக இருக்கிறது இந்த கட்டுரையில்.
நிறைவடைந்ததா அப்ப கனிமொழி உங்க தோழி இல்லையா.......
சிறந்த தோழமை, நீண்டு வளர வாழ்த்துக்கள்!!