நெட் டாக்ஸ் ! மனம் வருந்த வைத்த மாஹி! ஹரியானாவில் 70 அடி ஆழ போர்வெல் குழியில் விழுந்து, நான்கு வயதுச் சிறுமி மாஹி உயிரிழந்த நிகழ்வு, இணையத்தையும் மிகவும் உலுக்கிவிட்டது. ஒருபுறம் மாஹியை மீட்க நான்கு நாட்களாக ராணுவத்தினர் போராட, மறுபுறம் ட்விட்டரில் தொடர் பிரார்த்தனைகள் பதிவாகின. ஐந்து நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்த மாஹி பற்றி நொடிக்கு 20 ட்வீட்டுகள் பகிரப்பட்டன. இந்தியாவில் மூடப்படாத போர்வெல் குழிகளுக்குள் குழந்தைகள் விழுந்து மடியும் அவலம் தொடர்வது, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதிகாரிகள், அரசு ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டிக்கும் அதேவேளையில், பெற்றோர்களும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. ராணுவத்தினரின் 85 மணி நேரப் போராட்டத்தில் பலன் இல்லை என்ற தகவல் வெளியானதும், கண்ணீர் மழையால் நனைந்தது 'ட்விட்டர்'. ஆயிரக்கணக்கான இணையவாசிகள் ஸிமிறி இட்டு இரங்கலைப் பதிவு செய்தனர். கூடவே, 'இனியாவது பாடம் கற்போம்’ என்ற அறிவுறுத்தலையும் பதிய தவறவில்லை. மாஹி... மீண்டும் ஓர். . .
COMMENT(S): 1
ஒஹையோவில கூட ஆளுங்க இருக்காங்களா என்ன?