வேலு பேசறேன் தாயி !
வேலு பேசறேன் தாயி !வடிவேலு ஓவியம்: கண்ணா அந்தக் காலத்துலயுஞ் சரி... இந்தக் காலத்துலயுஞ் சரி... சினிமாதேன் நமக்கிருக்குற பெரிய பொழுதுபோக்கு. சினிமாவுக்குப் போறதுனா... நமக்கு தீபாவளி, பொங்க மாதிரி. மனசு முழுக்க எம்.ஜி.ஆரு, சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன், நாகேஷ§னு நட்சத்திரப் பட்டாளமே பட்டாம்பூச்சிகளா அலையும். குறிப்பா, எம்.ஜி.ஆருங்கிற ஒலக மகா தங்கத்தை நேர்ல பாக்க மனசு அடிச்சுக்கும். இப்ப இருக்குற மாதிரி... இன்டர்நெட்டோ என்னவோ ஒண்ணுல டிக்கெட்டு வாங்கி, பக்கத்துத் தேட்டர்ல போயி பகுமானமா பாக்குறதெல்லாம் அந்தக் காலத்துல நடக்காது. ஆறு மணி ஆட்டத்துக்குப் போகணும்னா... மூணு மணிக்கே கௌம்ப ஆரம்பிக்கணும். கொஞ்சம் வசதி வாய்ப்பு கொண்டவுக வண்டி பூட்டிக் கௌம்புவாக. நாம வண்டிப் பூட்டிப் போறவுகள வயித்தெரிச்சலோட பாக்கத்தேன் முடியும். அப்பா - அம்மாகிட்ட மாசம் முழுக்க கெஞ்சினா எப்பவாச்சும் ''சரி, கௌம்புங்க போகலாம்''னு சொல்வாக. மூணு தம்பிகளையும் ரெண்டு தங்கச்சிகளையும் குளிக்க வெச்சு, சீவி. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 6
மிகவும் அருமையான அனுபவங்கள். தொடரட்டும் வடிவேலுவின் கதை.
நெறைய்ய பேசிட்டுத்தானே இப்படி இருக்கீங்க. பத்தலையா வடிவேலு?
இந்த முறை இவர் சொன்னதெல்லாம் நல்லாருக்கு. மனசத்தொட்டது.
நேற்று நடந்தும், வண்டி கட்டிக்கொண்டும் சினிமாவுக்குப் போனதில் இருந்த மகிழ்ச்சியை சொந்தங்களுடன் ஆரம்பித்து, (பழையவை "மலரும் நினைவுகளாக" வந்து போனது...)
இன்று உறவுகளை(ள்) முற்றிலும் மறந்துபோன "அபார்ட்மெண்ட் உறவு" வாழ்க்கையோடு முடிச்சிட்டு மிக அழகாக சொல்லியிருக்கிறார்...
சினிமா பார்க்க சென்ற கதை,சுவையானது,கிராமத்தில் மாமா வீட்டில் இருந்து வண்டி கட்டி கொண்டு கரகாட்டகாரன் படம் பார்த்தது,நினைவுக்கு வருகிறது.....
Super...Unfortunately you smeared political sakkadai and tamilnadu lost a very good comedian and a decent individual... feel sad...