• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
24 May, 2013
என் டைரி 283
என் டைரி 283  வாசகிகள் பக்கம் சில நேரங்களில் திரைப்படத்தை மிஞ்சும் திருப்பங்கள் வாழ்வில் ஏற்படும். அப்படியரு திருப்பத்தால் நிலை குலைந்து போயிருக்கிறான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என் அண்ணன்! அதை நினைத்தே வேதனையில் விம்மிக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும்போதெல்லாம்... வேதனை பொங்குகிறது! இன்ஜீனியரிங் படிப்பு, நல்ல நண்பர்கள், அன்பான பெற்றோர் என சென்று கொண்டிருந்தன அவனுடைய நாட்கள். ஆண், பெண் என பாரபட்சமில்லாமல் அவனுக்கு நட்புகள் அதிகம். அப்படித்தான் கல்லூரிக்குச் செல்லும்போது பஸ்ஸில் பழக்கமானாள் ஒரு பெண். ஒரு நாள், 'நான் என் மாமாவ லவ் பண்றேன். ஆனா, வீட்டுல ஒப்புக்க மாட்டேங்கறாங்க. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க நீதான் ஹெல்ப் பண்ணணும்’ என்று அவள் கேட்க... இவனும் தலையாட்டிவிட்டான். நண்பர்களுடன் சேர்ந்து வியூகங்கள் வகுத்து, அவளுடைய மாமாவிடம் பேசினார்கள். உள்ளூரில் பிரச்னை ஏற்படும் என்பதால், வெளியூர் கோயிலொன்றில் திருமணத்துக்கு நாள் குறித்தனர். அவளும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தாள். ஆனால், கோயிலில். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 14

இங்கே ஏன் எல்லோரும் அந்தப்பையனையே குத்தம் சொல்கிறார்கள் என புரியவில்லை??? காதலன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் என கூறிவிட்டதால், சட்டென்று காதலனையே (கணவன்) மாற்றிவிட்டாளே அந்தப்பெண், அது எவ்வளவு பெரிய தவறு? இதென்ன சேலையா பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்வதற்க்கு??
இத்தனை காலம் பழகிய மாமனே அப்படி ஒரு கேள்வி கேட்கும்போது, மாமனுடன் பழகியது தெரிந்த இன்னொருவன் இதைவிட மோசமாக கேட்க மாட்டானா என யோசிக்க வேன்டாமா? வீட்டுக்குபோனால் அப்பா அம்மா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இவர் எவ்வாறு முடிவுக்கு வந்தார்? வீட்டை விட்டு ஓடிய பெண்ணை பெற்றோர்கள் திட்டாமல் கொஞ்சவா செய்வார்கள்? குறைந்த பட்சம் நாலு போடு போடத்தான் செய்வார்கள்..வேறு வழி இல்லை என பெற்றோர்கள் காலில் விழுந்தால் எந்த பெற்றோரும் நடுத்தெருவில் தன் பிள்ளையை விட்டுவிட மாட்டார்கள்...அவர்களைவிட பெண்ணின் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு யார்? இப்போது கல்யானத்துக்கு பின் ஏற்றொக்கொள்ளவில்லையா? தவறு செய்ததெல்லாம் இந்தப்பெண்..உதவி செய்யப்போனவனுக்கு தன்டனை...அது சரி சினிமாவைப்பார்த்து "ஷாஜகானாக" துடிக்கும் இளசுகளுக்கு இது தேவைதான்...

இங்கே ஏன் எல்லோரும் அந்தப்பையனையே குத்தம் சொல்கிறார்கள் என புரியவில்லை??? காதலன் ஒரு வார்த்தை சொல்லிவிட்டான் என கூறிவிட்டதால், சட்டென்று காதலனையே (கணவன்) மாற்றிவிட்டாளே அந்தப்பெண், அது எவ்வளவு பெரிய தவறு? இதென்ன சேலையா பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்வதற்க்கு??
இத்தனை காலம் பழகிய மாமனே அப்படி ஒரு கேள்வி கேட்கும்போது, மாமனுடன் பழகியது தெரிந்த இன்னொருவன் இதைவிட மோசமாக கேட்க மாட்டானா என யோசிக்க வேன்டாமா? வீட்டுக்குபோனால் அப்பா அம்மா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இவர் எவ்வாறு முடிவுக்கு வந்தார்? வீட்டை விட்டு ஓடிய பெண்ணை பெற்றோர்கள் திட்டாமல் கொஞ்சவா செய்வார்கள்? குறைந்த பட்சம் நாலு போடு போடத்தான் செய்வார்கள்..வேறு வழி இல்லை என பெற்றோர்கள் காலில் விழுந்தால் எந்த பெற்றோரும் நடுத்தெருவில் தன் பிள்ளையை விட்டுவிட மாட்டார்கள்...அவர்களைவிட பெண்ணின் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள் வேறு யார்? இப்போது கல்யானத்துக்கு பின் ஏற்றொக்கொள்ளவில்லையா? தவறு செய்ததெல்லாம் இந்தப்பெண்..உதவி செய்யப்போனவனுக்கு தன்டனை...அது சரி சினிமாவைப்பார்த்து "ஷாஜகானாக" துடிக்கும் இளசுகளுக்கு இது தேவைதான்...

துர்காவை விட இந்த கதை நன்றாக இருக்கு!

எனகென்னமோ இந்த பகுதியில் வரும் கடிதங்கள் அனைத்தும் கற்பனையோ என என்ன தோன்றுகிறது. ஏனென்றால் இதெல்லாம் கற்பனையை விட ஒரு பங்கு மேல்.

ஆனது ஆகி விட்டது. நல்ல பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் எல்லாம் வெற்றியாவது இல்லை. அவசரகதியில் நடந்த திருமணங்கள் தோல்வியாவதும் இல்லை. மனதை அமைதிப்படுத்திக்கொண்டு இருவரும் இல்லற வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதே நல்லது.

பொதுவா இந்தமாதிரி விவகாரத்துல பசங்க புகுந்து இரண்டுபேர வாழ வைக்கிறேன்னு இரண்டு குடும்பத்த நடுத்தெருவுக்கு கொண்டுவந்து கதிகலங்க வெச்சுருவாங்க..

அந்த மாதிரி ஒரு கலக்கு கலக்குலாம்னு பார்த்தவரு இப்போ கதிகலங்கிபோய் நிக்கிறாரு..



அந்தப்பெண்ணிற்கு வாக்கு கொடுத்தது முதல் லேடீஸ் ஹாஸ்டலில் பாதுகாப்பாக தங்கவைத்தது வரை எவ்வளவு பொது நலவாதியாக புகுந்து விளையாடி இருக்கிறார்..

அப்படிப்பட்ட பொதுநலவாதிக்கு.. பொதுநலமாக ஒரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று வரும்போது நிச்சயமாக மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமல்லவா..

கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்தான் என்ன..

தன் வாழ்க்கை தன் எதிர்காலம் என்று வரும்போதுமட்டும் கசக்கிறதா..?

இவர் ஒருவர் இரண்டு குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து வைப்பாராம்..

இரண்டு குடும்பம் சேர்ந்து இவர் லட்சியம், கனவு எதையும் மதிக்காமல் நிம்மதியை கெடுத்துவிட்டது என்று விவாகரத்து கேட்பாராம்..



அரித்மேட்டிக் கால்குலேஷன் கூட எளிமையாக புரிந்துவிடும்..

இவர்கள் வகுத்து வைத்திருக்கும் நியாயம் மட்டும் புரியவே புரியாது..




-அபுதாலிப் மலேசியா

கல்யாணம் பண்ணிட்டு இத்தனை யோசனை செய்யுற உங்க அண்ணன், தாலி கட்டும் முன்பே கறாரா முடியாதுன்னு சொல்லி இருக்கலாமே. அவருக்கும் அந்த பெண்ணின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்க போய் தான் இத்தனை உதவி, திருமணம் என்று செய்திருப்பார். இப்போது இதை விட நல்ல பெண் கிடைத்திருக்குமோன்னு ஒரு சபலமாக கூட இருக்கலாம். படிப்பு முடிந்து ஒரு வேலை கிடைக்கட்டும், வயது ஏறும் போது பக்குவமும் வரும். பலர் வாழ்வை கம்பேர் செய்யாமல் தன் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்த சொல்லுங்கள். ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு வரன் பார்க்கும் போது பலர் வருவர், சில திருமணம் நிச்சயத்துக்கு பின் கூட நிற்க்கும். அதை போல அப்பெண்ணின் நிலையை நோக்க உங்கள் அண்ணனுக்கு சொல்லுங்கள். அன்பு செலுத்துவதை இருவரும் அதிகரித்தால் பிரிவு தேவைப்படாது. அவசரப்பட்டு விவாகரத்து வேண்டாம்.

இந்த ஹீரோ இருக்காரே,அதாங்க உங்க அண்ணன்,அவரை அவர் நண்பர்களை விட்டே,அவரை ஆஹா..ஓஹோ என்று பாராட்ட சொல்லுங்கள்,ஹீரோ உடனே மாறிடுவார்,தாலி கட்டுவாராம்,அப்புறம் டைவர்ஸூம் செய்வாராம்...எதுக்கு திருமணத்திற்கு 25வயதாவது ஆக வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால் இந்த மாதிரி ஹீரோயிச மனநிலையில் இருந்து பக்குவபட்ட மனிதனாக,ஆன பிறகு தெளிவாக இருப்பார்கள் என்பதுதான்,முதலின் அவரவர் படிப்பு,வேலையை ஒழுங்காக பார்க்க சொல்லுங்கள்,பிறகு காலமும் அனுபவமும் அவரை பக்குவபடுத்தும்......

அதெப்படி "மாமா மாமா" என்றெல்லாம் காதலாகி கசிந்து உருகிய ஒரு பெண் திடீரென்று மனம் மாறி "நீதான் எனக்கு எல்லாம்" என்று சொல்வாள்? சம்திங் ராங்!!!!

'உன்னோட ஓடிப்போயிட்டதா ஊரே பேசின பொண்ணு, இனி எனக்கும் வேண்டாம்’ என்று அவளுடைய மாமாவும் அதிர்ச்சி கொடுக்க... உடைந்து போய்விட்டான் என் அண்ணன். இந்நிலையில், அடுத்த இடியை இறக்கினாள் அந்தத் தோழி. 'இந்த வார்த்தைகள் சொன்ன மாமா என் மனசுல செத்துப் போயிட்டார். நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ’ என்று கூலாக சொல்லிவிட்டாள்............. ---> ஏன்பா, இதெல்லாம் உண்மையான காதலா?? சிச்சீ.... கண்ட சினிமா பாக்க வேன்டியது, எதிர் பாலின ஈர்ப்பை காதல்'னு தப்பா புரிஞ்சுக்க வேன்டியது... சின்ன மன்ஸ்தாபன்னா உடனே காதல் கசந்துவிட்டது'னு பிரிய வேன்டியது... இந்த அண்ணனுடய வாழ்க்கை இப்படியானது பெரிய சோகம் தான்... இது போன்ற 'அலைபாயுதே' ஸ்டைல் கல்யாணத்துக்கு உதவும் 'ஷாஜகான்'களுக்கு ஒரு நல்ல பாடம்!!.... நடந்தது ஒரு விபத்து கல்யாணம் தான்!! தாலி போன்ற மடத்தனமான சென்டிமென்ட் பார்க்காமல் விவாகரத்து செய்வது நல்லது என்று தோன்றுகிறது... யாராவது அந்த பெண்ணிற்கு நல்ல புத்திமதி கூறி, வாழ்க்கையின் நிஜங்களை, யதார்த்தங்களை புரிய வைக்க வேண்டும்.

படிக்கிற வயதில் காதலுக்கு உதவும் ஹீரோயிசம் எதற்கு? வயது கோளாறினால் செய்திருக்கலாம். சரி, அந்த பெண் சொன்னதற்காக கல்யாணமும் செய்து கொண்டாகி விட்டது. பிறகு வெறுப்பது காட்டுமிராண்டித்தனமான ஒன்று. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டாமா. இப்போதும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை, சாதிக்க வேண்டியதை செயல்படுத்த வேண்டியது தானே. திருமணம் குறித்த பல கனவுகள் எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. சரி, வாதத்திற்காக சொல்வதென்றால் சாதித்த பின் திருமணமாகி, அதில் வேறு குறை இருப்பின் யாரை நோவார் உங்கள் சகோதரர். அந்தப்பெண்ணோ படித்தவள். எடுத்து சொன்னால், கண்டிப்பாகத் துணையாக இருப்பாள் - சாதனைக்கு. வாழ்க்கையை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் மனோபாவத்தில் தான் இருக்கிறது. உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு என்று பாடலும் உண்டே.
பிரச்சனைக்கு சரியான வழி, அண்ணனின் மனமாற்றம் தான். சாதிக்க வேண்டிய வயதில் என்ன பாழானது! ஒன்றுமே குறிப்பிடவில்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

இருவரும் படித்தவர்கள். திருமண வாழ்வில் உணர்ச்சி வயப்பட்டு ஈடுபடவில்லை எனில் (இது கற்பு சம்பந்தப்பட்டது அல்ல) விவாகரத்து செய்வதே நலம். ஏனெனில் இந்த வெறுப்பு எந்த ஒரு தோல்வியையும் பெரிதாக்கி காட்டும். எந்த ஒரு இயலாமையும் பெரிதாக தெரியும். ஆனால் அந்த பெண்ணின் மறுவாழ்விற்கு ஆதரவளிக்க வேண்டியது புகுந்த வீட்டாரின் கடமையாக வேண்டும். அந்த பெண் 'செட்டில்' ஆகும் வரை பாதுகாக்க வேன்டியதும் அவர்களே. அப்படி தாம்பத்யம் நடத்தி இருப்பின் (என்ன காரணமாக இருந்தாலும்) இந்த பையன் அடங்கியே போக வேண்டும். மீண்டும் இது கற்பு சமபந்தப்பட்டது அல்ல. என்று திருமணம் நடந்துவிட்டது என்ற உரிமையில் ஒரு உறவு ஏற்பட்டதோ அன்றே அந்த திருமணத்திற்கு அங்கீகாரம் தந்துவிட்டான் இந்த பையன். அதிலிருந்து மீள இந்த சால்ஜாப்பு உதவாது. அப்படி முயன்றால் அது அவனின் கயமைத்தனத்தை காட்டுகிறதே தவிர தெரியாமல் "மாட்டி கொண்ட" ஒருவனாக தெரியவில்லை.

stupids.

சுழ்நிலையின் கைதி;திருமண பந்தத்தின் கங்கணம்.கடவுள் இணைத்த வைத்த சங்கமம்.கைநெகிழின்,குற்ற உணர்ச்சி கொல்லும்.பெண்பாவம் தொடரும்.அன்பால் அகிலம் வெல்லலாம்!தொடர்க..மகிழ்க...வெல்க...!

Displaying 1 - 14 of 14
Only Subscriber Can Post Comments

அவள் விகடன்
< 28 Aug, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

தொடர்கள்

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook