ராசிபலன் எதிர்பார்த்த பணம் கைசேரும்! மேஷம்: மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குபவர்களே! குருபகவான் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை, கைக்கு வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். 20-ம் தேதி மாலை 4 மணி முதல் 22-ம் தேதி மாலை 6.30 வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சனிபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால்... சோர்வு, களைப்பு, வீண் சந்தேகம் வந்து போகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்குக் கூடும். சாமர்த்தியம்... உச்சத்தில்! ரிஷபம்: சொந்த உழைப்பில் வாழ விரும்புபவர்களே! சனிபகவான் 6-ம் வீட்டில் நுழைந்திருப்பதால், எதையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகிச் சென்ற சொந்த பந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. 22-ம் தேதி மாலை 6.30 மணி. . .
COMMENT(S):