வாழுறதுக்கு இது போதாதுங்களா..? ! ''ஆத்தாவும் அப்பனும் கத்துக் கொடுக்காத வித்தையவா... உங்க பள்ளியூடம் சொல்லிக் கொடுத்துடப் போகுதுங்? தலமுறை தலமுறையா படிப்பு பக்கமே போகாம இருந்ததால எங்க சனம் கெட்டுப்போனது ஒண்ணும் கிடையாது. இப்போ படிக்கப் போற சிறுவைகளால (குழந்தைகள்) எங்க பொழப்பு மாறிடப் போறதும் கிடையாதுங்!'' - பொளேர் வார்த்தைகளில் புதிய தத்துவம் சொல்கிறார்கள் பழங்குடிப் பெண்கள். இன்றைக்கு உலகமே... ஸ்கூல் அட்மிஷனுக்குப் பின்னால் அலைமோதிக் கொண்டிருக்கிறது. தன் குழந்தையின் இரண்டாவது வருட பிறந்த நாள் பரிசாக... ப்ளே ஸ்கூல் அட்மிஷனைக் கொடுக்கும் அளவுக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது. சமூகத்தின் ஒரு முகம் இப்படியிருக்க, குழந்தை... ஆறேழு வயதைத் தொட்ட பிறகு, போனால் போகிறதென்று பள்ளிக்கூடம் அனுப்புவது... அல்லது வாழ்நாள் முழுக்க படிப்பே தேவையில்லை என்று தீர்மானிப்பது என்பதை காலகாலமாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் மக்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக... ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனப்பகுதியிலுள்ள பழங்குடி கிராமங்களில் வாழும். . .
இம்மக்களுக்கு வாழ்வாதாரங்களை அமைத்து கொடுத்து, பின்னர் வாழ்வினை வளப்படுத்தும் கல்வியை அறிமுக படுத்த வேண்டும்.பெண்களுக்கு வீட்டில் இருந்தே கைத்தொழிலை அறிமுகப்படுத்த வேண்டும், சாலை வசதிகளும், கல்வி சாலை அவசியம். மனிதனாய் அவர்களையும் நாம் நினைத்தல் மிகவும் இன்றி அமையாதது.
கால் வயிறு உண்ணும் அவர்கள் முழு வயிறு உண்ணுதலே மனிதம்.(யாருடைய பொறுப்பு இதனை செய்வது??) மனிதனாய் பிறந்த நாம் அனைவரும் சரி சமமே.
இருப்பினும், தங்கள் குழந்தைகளை அவர்களுக்கு இயன்ற அளவில் சிறப்பாக சமூக குணங்களை சொல்லி தந்து வளர்ப்பது பாராட்டுக்கு உரியது.
குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள்,ஆனாலும் இவர்கள் போக்கில் கல்வியை புகுத்துவதுதான் நல்லது,இல்லை என்றால்,நகரத்து குழந்தைகளின்,குழந்தை பருவத்தை இழந்து விடுவார்கள்.....
அடேங்கப்பா..பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆறு மாதம் வரை பார்த்துக் கொள்ளும் பெண்களா...? வாசலில் நிற்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்து விட்டால், பார்க்காத மாதிரி முகம் திருப்புவது,செல் பேசுவது போல் பாவலா செய்வது ....சட்டென்று தன் வீட்டுக்குள் நுழைந்து கொள்வது.. இப்படி இருக்கும் டவுன்காரர்களை நினைத்து பெருமூச்சு தான் விட முடியும் நம்மால்.
COMMENT(S): 3
இம்மக்களுக்கு வாழ்வாதாரங்களை அமைத்து கொடுத்து, பின்னர் வாழ்வினை வளப்படுத்தும் கல்வியை அறிமுக படுத்த வேண்டும்.பெண்களுக்கு வீட்டில் இருந்தே கைத்தொழிலை அறிமுகப்படுத்த வேண்டும், சாலை வசதிகளும், கல்வி சாலை அவசியம். மனிதனாய் அவர்களையும் நாம் நினைத்தல் மிகவும் இன்றி அமையாதது.
கால் வயிறு உண்ணும் அவர்கள் முழு வயிறு உண்ணுதலே மனிதம்.(யாருடைய பொறுப்பு இதனை செய்வது??) மனிதனாய் பிறந்த நாம் அனைவரும் சரி சமமே.
இருப்பினும், தங்கள் குழந்தைகளை அவர்களுக்கு இயன்ற அளவில் சிறப்பாக சமூக குணங்களை சொல்லி தந்து வளர்ப்பது பாராட்டுக்கு உரியது.
குழந்தைகள் குழந்தைகளாக இருக்கிறார்கள்,ஆனாலும் இவர்கள் போக்கில் கல்வியை புகுத்துவதுதான் நல்லது,இல்லை என்றால்,நகரத்து குழந்தைகளின்,குழந்தை பருவத்தை இழந்து விடுவார்கள்.....
அடேங்கப்பா..பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆறு மாதம் வரை பார்த்துக் கொள்ளும் பெண்களா...? வாசலில் நிற்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்து விட்டால், பார்க்காத மாதிரி முகம் திருப்புவது,செல் பேசுவது போல் பாவலா செய்வது ....சட்டென்று தன் வீட்டுக்குள் நுழைந்து கொள்வது.. இப்படி இருக்கும் டவுன்காரர்களை நினைத்து பெருமூச்சு தான் விட முடியும் நம்மால்.