யாதுமாகி நின்றாள் ! வணக்கத்துக்குரிய பெண்ணை நினைவுகூரும் பக்கங்கள் ''ரெங்கநாதப் பெருமாளே... பச்சக் கொழந்த இப்படி பசியால அழறதே..!'' ''பெத்தப் புள்ளைக்கு ஒரு வாய் பால் கொடுக்க முடியாம கெடந்து தவிக்கிறாளே மகராசி..!'' கவலை தோய்ந்த குரல்கள்... அந்தக் குளிர் சூழ்ந்த இரவில் கேட்கின்றன. 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதத் தின் மழைக் காலம். இருட்டின் கருமை கலந்து வேகமாய்ச் சுழன்றடிக் கும் சாரல் மழை... இடியும் மின்னலு மாய் வலுக்கிறது. அந்த இரவில் பொன்னம்மாள் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். மழைக் குளிரால் நடுங்குகிறது அந்தத் தாயின் உடல். குழந்தையின் அழுகுரல் அந்த அறை முழுவதும் பட்டுத் தெறிக்கிறது. ஒருபுறம் பிரசவக் களைப்போடு குளிரில் நடுங்கும் தாய்... மறுபுறம் ரத்தமும் ஈரமுமாய் பசியில் துடிக்கும் சேய். எழுந்து பாலூட்ட முடியாத அந்தத் தாய்க்கு கொஞ்ச நேரத்தில் குளிர் ஜுரம் வாட்டியெடுக்க... பச்சை உடம்பு ஜன்னியால் துவள்கிறது. குழந்தையின் பசிக்கு. . .
COMMENT(S): 6
யாதுமகி நின்ரால் ரொம்ப அழகான தொகுப்பு
பசும்பொன் முத்துராமலிஙத் தேவரது வாழ்க்கையிலும் ஒரு முசுலிம் தாய் தான் தாய் பால் கொடுத்து அவரை காப்பாற்றி இருக்கிறார்.
மனிதம் தான் முக்யம் அதை உணர்த்தீருக்கிறது அந்த முஸ்லிம் குடும்பம்.அருமை.
இன்னொரு கலைஞர், நான் மற்ற சமயப் பாடல்களுக்கு இசை அமைக்க மாட்டேன் என்று இருக்கிறாரே.
தாய்மைக்கு ஏது,ஜாதி,மதம்,கடவுள்,இவை அனைத்தும் கடந்தது தாய்மை...அற்பதமான தாயை நினைவு படுத்தி இருக்கிறார் கவிஞர் வாலி........
அரங்கத்து கவிஞரின் நன்றி உணர்வு அற்புதம்!!