அவள் 16 - வெளிச்சம் தந்த அனிச்சம் ! கல்லூரி மாணவிகள் அல்லது மாணவர்கள் நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தாலே... சினிமா, காபி ஷாப், அரட்டைக் கச்சேரி... என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், நான்கு மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, படிக்கும்போதே பிஸினஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது திரும்பிப் பார்க்க வைக்கும் விஷயம்தானே! கடந்த நான்கு ஆண்டுகளாக கிட்டத்தட்ட, 200 ஈவன்ட்களுக்கு மேடை அலங்காரங்கள் செய்து, அந்த வருமானத்தை தங்களின் படிப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்தி வரும் சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியைச் சேர்ந்த 'அனிச்சம்’ குழு கல்லூரி மாணவர்கள் விதார்த்தி, ஆனந்த், சுரேஷ் மற்றும் ஆர்த்தியைச் சந்தித்தோம். விதார்த்தி, மாற்றுத்திறனாளி. காது கேட்காத, வாய் பேச முடியாத அவரின் மனதை, நமக்கு அவருடைய அம்மா மொழிபெயர்த்தார். ''அம்மா வயித்துல எட்டு மாச கருவா இருந்தப்போவே, அப்பா இறந்துட்டார். மகாராஷ்டிரா பேங்க்ல வேலை பார்க்கற அம்மாதான், தனியாளா வளர்த்தாங்க. ஓவியத்துல எனக்கு ஆர்வம். . .
COMMENT(S): 5
விதார்த்தி மற்றும் குழுவினரே வார்த்தைகள் இல்லை முழுமையாய் பாராட்டிட!!
அரிய உங்களின் முயற்சியும் வெற்றியும் நீண்டு தொடர வாழ்த்துக்கள்.
தெளிவா இருக்கிற பசங்களை அடையாளம் காட்டுவதில் தெளிவாக இருக்கும் விகடனைப்பாராட்டுகிறேன்..
நல்ல அருமையான கூட்டணி,வாழ்த்துக்கள்....
செல்லும் பாதை சரியாக இருக்கும் போது, மெல்ல ஓடினாலும் வெற்றிதான் - விவேகனந்தர்
இந்த கால பசங்க தெளிவா இருக்காங்க. மேலும் மேலும் உயர பாராட்டுக்கள்.