எப்படி வந்தேன் தெரியுமா ? - நோட்டுப் புத்தகம் வணக்கம் நண்பர்களே... நான்தான் நோட்டுப் புத்தகம் பேசுறேன். வருட ஆரம்பத்துல குண்டா இருக்கிற என்னை ராக்கெட் செய்யவும் தேவை இல்லாத எதையாவது எழுதவும் 'சரக் சரக்’ என என்னிடம் இருந்து பேப்பர்களைக் கிழித்து என்னை ஒல்லி ஆக்கிடறீங்க. நான் எப்படி எல்லாம் தயார் ஆகி வருகிறேன் என்று தெரிந்தால், இப்படி எல்லாம் செய்ய மாட்டீங்க. வாங்க சொல்றேன். முதலில் நான் மூங்கிலாகவும் மரப்பட்டையாகவும் காட்டில் இருந்தேன். அங்கே இருந்து வெட்டி, டன் டன்னாக லாரியில் ஏற்றி காகிதம் செய்யும் தொழிற்சாலைக்கு வந்தேன். அங்கே ஆரம்பத்தில் செதில் செதிலாய் மரப்பட்டையைச் சீவி, பசைபோன்ற வேதிக் கலவையோடும் கொஞ்சம் சுண்ணாம்போடும் சேர்த்து மாவு மாதிரி அரைத்தார்கள். நீண்ட நீண்ட அச்சுகளில் ஊற்றினார்கள். அப்போது நான் 173 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கினேன். அப்படி அச்சில் சதுரமாய் வார்த்த என்னை ராட்சச பிளேடுகள் மூலம் சன்னமாய்ச் சீவி அட்டையாகவும் பேப்பராகவும். . .
COMMENT(S):