சுட்டி விஞ்ஞானி தொழிற்சாலைகளில் சில வகை இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியமாக இருப்பதால், விபத்துக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனைத் தடுக்கும் விதமாக, 'ஹியூமன் செக்யூரிட்டி சிஸ்டம்’ என்ற கான்செப்ட்டைக் கண்டுபிடித்துத் தங்க மெடலும் பெற்று இருக்கிறார், சேலம் மாவட்டம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மதிக்கண்ணன். கடந்த பிப்ரவரி மாதம் தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான 'இன்ஸ்பயர்’ கண்காட்சியில் இந்தக் கான்செப்ட்டைச் செய்து காட்டி பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலானப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவரது கண்டுபிடிப்பின் மூலம் இனி ஹெல்மெட் அணியாமலோ அல்லது போதை, சிகரெட் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டோ யாராவது இயந்திரங்களை நெருங்கினால், அவை இயங்காது. ''விபத்து மூலம் உயிர்ச் சேதம் ஆவதைச் செய்திகளில் படிக்கும்போது, ரொம்பக் கஷ்டமா இருக்கும். அந்த நேரத்தில் என். . .
COMMENT(S): 2
சிறந்த கண்டுபிடிப்பு.வாழ்த்துக்கள்
பயனுள்ள கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்