வாசிப்பு என்பது ஒரு வரம் ! ''வாழ்க்கை எனும் நதி இழுத்துச் செல்லும் பாதையில் நான் பயணிக்கிறேன்'' என கவிதை நடையில் பேசுகிறார் ஹர்ஷிதா. இந்தியாவின் இளம் ஆங்கில நாவல் ஆசிரியர் என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கும் ஹர்ஷிதா, பெங்களூருவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி. ''அப்பா பசவராஜ், சி.பி.ஐ ஆபீஸர் என்று சொல்வதைவிட தீவிர வாசகர் எனச் சொல்லலாம். 'வாசிப்பு என்பது ஒரு வரம்’ என அடிக்கடிச் சொல்வார். அவர்கிட்ட இருந்துதான் அந்த வரம் எனக்கும் வாய்த்தது'' என்கிறார் ஹர்ஷிதா. ரூபி ரஷ், அல்மோஸ்ட் டெஸ்ப்ரேட், என்ற இரண்டு நாவல்களை எழுதி இருக்கும் ஹர்ஷிதா! இந்தச் சாதனைக்காக கின்னஸ் புத்தகத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார். ''சிறு வயதில் இருந்தே அப்பா நிறைய புக்ஸ் வாங்கிக் கொடுப்பார். என் பர்த்டேவுக்கும் எல்லோரும் புக்ஸ்தான் கிஃப்ட் கொடுப்பாங்க. எட்டு வயதிலேயே ஏகப்பட்ட ஃபிக்ஷன் புக்ஸ் படிச்சுட்டேன். எப்போ. . .
COMMENT(S):