அழிவின் விளிம்பில் விலங்குகள் ! ''புலிகளின் இனம் அழிந்துகொண்டு வருகிறது அதை நாம் காப்பாற்ற வேண்டும். யானைகளின் எண்ணிக்கைக் குறைவதைத் தடுக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கவேண்டும்'' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வதைக் கேட்டு இருப்பீர்கள். '''புலிகள், யானைகள் முதலான விலங்குகள் அழிந்துவிட்டால் அப்படி நமக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? 'ஒரு காலத்தில் டைனோசர், மம்மோத் (Mammoth) எல்லாம் பூமியில் இருந்து அழிந்துவிட்டன. ஆனால் இந்தப் பூமி இன்றும்கூட அப்படியேதான் இருக்கிறது’ என்று நினைத்தால் அது நம்முடைய ஆபத்தை இன்னும் பல மடங்கு அதிகரித்துவிடும்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் அசோகன். ''அழிந்து வரும் உயிரினங்கள்பற்றி பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த ஜூன் 27 முதல் ஜூலை 2 வரை 'அழிவின் விளிம்பில் இந்தியப் பாலூட்டிகள்’ (Endangered Mammals of India) என்ற தலைப்பில் அரசு அருங்காட்சியத்தில் கண்காட்சி நடைபெற்றது. அதில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலி, மலபார். . .
COMMENT(S):