மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் ! மாலை நேரம். பூங்காவில் இருந்தார்கள் மாயா டீச்சரும் சுட்டிகளும். எதையோ பறிகொடுத்தவளைப் போல் இருந்த தீபாவிடம், ''என்ன ஆச்சு தீபா?'' என்று கேட்டார் மாயா டீச்சர். ''ஸ்கூல் திறந்துட்ட சோகமோ?'' என்று கேட்டான் பரத். அவனது கிண்டலைப் பொருட்படுத் தாமல் தீபா சொன்னாள், ''மதுரை பக்கத்தில் இருக்கிற என் பாட்டி ஊருக்கு ஒவ்வொரு வருஷமும் போவேன். அங்கேயும் எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ். அதுல ஒரு ஃப்ரெண்டோட குட்டித் தம்பி சரியான வாலு. அவனோடு விளையாடிட்டு இருந்தா நேரம் போறதே தெரியாது. அவனுக்கு டெங்கு காய்ச்சலாம். பாட்டி போன்ல சொன்னதில் இருந்து மனசே சரியில்லை'' என்றாள். இதைக் கேட்டதும் தீபாவின் சோகம் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொண்டது. ''மருத்துவம் எவ்வளவோ முன்னேறினாலும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிக் காய்ச்சல்னு படை எடுத்து வர்ற நோய்களைத் தடுக்க முடியலையே. கடவுள் ஏன் இந்த மாதிரி நோய்களைக் கொடுத்துத் துன்புறுத்துறாரோ...'' என்றான் பிரதீப்.. . .
COMMENT(S):