கிராமத்து விளையாட்டு சிலைகளுக்கு உயிர் இருப்பதாக உலகம் முழுவதும் நம்பிக்கை உள்ளது. பொம்மை வடிவில் உள்ள துஷ்டத் தெய்வமான குறளி, மனிதர்களுக்குத் தீமை செய்யும். தெய்வச் சிலைகள் உயிர்த்து எழுந்து தடுக்கும் என்ற நம்பிக்கை நமது கிராமங்களில் உண்டு. இதன் அடிப்படையில் உருவான விளையாட்டுகளில் ஒன்று, திரி திரியாம் பொம்மாளே. இந்த விளையாட்டை பெரும்பாலும் பெண்களே விளையாடுவார்கள். இருவர் இருவராக இரண்டு அடி நீளத்துக்கு பாம்புபோல் மண்ணைத் திரித்து (குவித்து) வைப்பார்கள். இந்த விளையாட்டில் ஆட்டத்தை யார் துவக்குவது என்ற சிக்கல் இல்லை. விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் 'நான் ஆடவா, நீ ஆடுகிறாயா?’ எனக் கேட்டு ஆட்டம் துவங்கும். முதலில் ஆட்டத்தைத் துவக்குபவர், சின்னதான துணியால் திரி திரிப்பார். அதில் தலை, கை கால்கள்போல் செய்வார். அந்தத் துணித் திரி பொம்மையை விரல் இடுக்கில் மறைத்தவாறு, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றி வைப்பார். இப்படி எந்தக் கையில் துணி திரி பொம்மை இருக்கிறது. . .
COMMENT(S):