வாயில் ரத்தம்... புற்றுநோய் அறிகுறியா? ரமாமணி, சென்னை ''50 வயதைக் கடந்த பெண்மணி நான். கை, கால் மூட்டு வலிக்காக 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைக் கடந்த ஆறு மாதங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு வருமாமே... உண்மையா?'' டாக்டர் மோகன், பொது மருத்துவர், கரூர் ''மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து மாத்திரைகளைத் தன்னிச்சையாக உட்கொள்வது தவறு. அப்படியிருக்க, ஆறு மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கை, கால் வலி வரும்போது டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக அல்லது வீரியம் அதிகம் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டால் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். நோய் குணமான பிறகும், அதே அளவு உள்ள மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அல்சர், கண்புரை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற. . .
COMMENT(S):