மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்! ''நேத்துகூட நல்லாப் பேசிட்டு இருந்தார். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு வலின்னு கத்தியவர்தான்...''; ''இரண்டு தடவை அட்டாக் வந்துச்சு... அப்பவே கவனிச்சிருந்தால் பிழைச்சிருக்கலாம்!'' - மாரடைப்பால் உயிரிழப்பவர்களைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் தொடங்கும். முன்கூட்டிய அறிகுறி எதுவும் இல்லாமல், சட்டென வந்து உயிரை உலுக்கி விளையாடும் மாரடைப்புக்கு இளம் வயதினரும் தப்புவது இல்லை. மாரடைப்புபற்றிய விழிப்பு உணர்வோ, முதலுதவி விவரங்களோ தெரியாததால்தான் இத்தகைய இழப்புகளுக்கு ஆளாக வேண்டிய துயரம். ''யாரோ ஒருவர் நம்முடைய மார்புப் பகுதியில் அழுத்துவது போன்று அதிகமான வலி இருக்கும். இதனுடன் அதீத வியர்வை மற்றும் மயக்கம் வரும் அறிகுறிகளும் இருக்கும். அது ஒருவேளை மாரடைப்பாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது 'மைனர் ஹார்ட் அட்டாக்’. 20 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தால் அது 'சிவியர் ஹார்ட் அட்டாக்’. இதில் எந்த வகையாக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது அவசியம்'. . .
COMMENT(S):