குட் நைட்! அதிகாலையிலேயே அந்த வீடு பதற்றத்தில் இருந்தது. ஆளுக்கு ஆள் குற்றப் பத்திரிகை வாசித்தார்கள். அந்த வீட்டின் தாழ்வாரத்தில் இடி இடித்தது. கூடத்தில் மழை பெய்தது. எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் இறங்கின வாய் வார்த்தைகள். 'வக்கீலிடம் செல்வதா... டாக்டரைப் பார்ப்பதா?’ என்கிற லாவணிக் கச்சேரி உச்சத்தைத் தொட்டது. நடந்தது என்ன? முகேஷ் - சரண்யாவுக்கு முதல் நாள்தான் திருமணம். அன்று இவர்கள் தலை மேல் விழுந்த அட்சதைகளின் எண்ணிக்கையைவிட இன்று அதிகாலையில் மணமகனின் மேல் விழுந்து தெறித்த வார்த்தைகள் அதிகம். திருமணமான அன்றே அவர்களுக்கு முதல் இரவு. ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகளுடனும் மிதக்கும் கற்பனைகளுடனும்தான் முகேஷ§ம் சரண்யாவும் அந்த முதல் இரவில் சந்தித்தார்கள். ஆனால், வாலிபமும் வளமையும் சேர்ந்து எத்தனை தடவை கியர் போட்டாலும் முகேஷால் சரண்யாவைத் திருப்திப்படுத்தவே முடியவில்லை. ஒரு பெண்ணை முதல் இரவில் திருப்திப்படுத்த முடியாதவனுக்குச் சமூகம் தருகிற பெயர் 'ஆண்மை இல்லாதவன்’. முகேஷ§க்கும் அந்தப் பொல்லாத. . .
COMMENT(S): 1
இது ஆணகளுக்கு மட்டும் இல்லை பெண்களுக்கும் தானே நடக்கிறது. அசதி, முதல் முறை ஆணுடன் தனி அறையில். இப்படி எத்தனையோ காணங்கள் இருக்கு.