• வெள்ளச் சேதம்: உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவி: பிரதமர் அறிவிப்பு
  • லிப்ட் கேட்டு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் 8 பேர் பலி: புதுக்கோட்டை அருகே சோக சம்பவம்
  • சஸ்பெண்ட் ஆன 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
  • மாநிலங்களவை தேர்தல்: ஆதரவு கேட்டு அன்புமணியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
  • பாபநாசம் உள்பட 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: ஜெயலலிதா
  • கருணாநிதியுடன் ஜவாஹிருல்லா சந்திப்பு: கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்
  • காண்டாமிருகம் தாருங்கள், காட்டெருமை தருகிறோம்: அசாம் முதல்வருக்கு ஜெயலலிதா கோரிக்கை
  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி; காங்.கிற்கு நிதிஷ் நன்றி
  • புதுக்கோட்டை: பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி
  • சென்னையில் மலிவு விலை காய்கறி கடைகள்: திறந்து வைக்கிறார் ஜெ.
19 June, 2013
பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்?
பணம் திருடாமல் டிஸ்க் எடுத்தது ஏன்? தமிழகம் முழுவதும் சர்வசாதாரணமாக வங்கிக் கொள்ளை நடக்கும்போது, மதுரை மட்டும் விதிவிலக்கா என்ன? கடந்த 6-ம் தேதி கே.கே.நகரில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் சம்பந்தப்பட்டவர்களை இதுவரை பிடிக்கவில்லை.  இந்த நிலையில், சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் சுட்டுக்​கொல்லப்பட்ட அதே இரவில், மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடாவில் ஒரு கொள்ளை நடந்திருக்கிறது. ஆனால், இங்கே திருடப்​பட்டது பணம் இல்லை என்பது​தான் ஆச்சர்​யத்தையும் சந்தேகத்தையும் கிளப்​புகிறது. கொள்ளை நடந்த வங்கிக்குச் சென்​றோம். மக்கள் நெருக்கமுள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கிறது வங்கி. அதன் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளின் ஒன்றில் வங்கியின் மேலாளர் குடியிருக்கிறார். மாடியில் வசிப்பவர்களின் வசதிக்காக அந்த காம்பவுண்டின் ஒரு கேட் திறந்த நிலையிலேயே இருக்கிறது. வங்கியின் பின்பக்கம் மரக்கதவுடன் கூடிய வாசல். உள்பக்கம் இரும்புத் தடி போட்டும், வெளிப்பக்கம் கிரில் கேட் போட்டும். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 13

இதில் பெரிய தலைகள் உருளும் போலுள்ளது.

இது ஏன் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பழைய ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டாக்களுக்கு தான் அதிக மதிப்பு இருக்க முடியும். ஆனால், கோர் பாங்கிங்கில் எல்லாமே சர்வரில் தான் பதிவு செய்யப்படும். கம்புயூட்டரில் ஏதாவது வைரஸைப் புகுத்தி எந்த கணக்கில் எவ்வளவு பணம் போடப்படுகிறது என்று பார்க்கலாம். அதை ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவு செய்து பிறகு அதைத் திருடலாம். டெபிட் கார்டு விஷயங்களைப் பதிவு செய்வார்களா எனத் தெரியவில்லை. அப்படி இருந்தால் பலரது டெபிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

பேங்க்கில் கொள்ளையடித்தால் சுடுகிறார்கள். அதற்குப் பதில் பணம் போடுக்கிறவர்கள் வீட்டு விலாசம் எடுக்க கணனியைக் கை வைத்து இருக்கிறார்கள். எதற்கும் சுதாரிப்பாக இருக்கவும் பணம் போட்டவர்கள்.

ஷ்ரீ ராம்,

பழைய ஊழியர்களின் படத்தொகுப்பில், புதிய ஊழியர்களின் 'காதலியின் புகைப்படம்' இருந்தால் என்னவாகும்?... அதான், ஹி..ஹி..

"டிஸ்குகளை மட்டும் சாவ​காச​மாக எடுத்துச் சென்று இருக்​கிறார்கள் என்றால் மிகப்பெரிய சதி நடக்கப்போகிறது. போலீஸ் உஷாராக இருக்கவேண்டும்'' -----> சென்னைக்கு திரிபாதி, மதுரைக்கு ஒரு கண்ணப்பன்.

இது என்னடா ஹார்ட் டிஸ்குக்கு வந்த சோதனை?

திருட வந்த கள்ளப்பய காசை விட்டுட்டு ஹார்ட் டிஸ்கை திருடுகிறான் என்றால்.... பெரிய தீனியாக கவ்வி கொண்டு போயிருக்கிறாது கள்ளப்பூனை....

அய்யா அசோகரே, பழைய ஊழியர்கள் தற்போதைய ஊழியர்களை வைத்து அவற்றை அழிக்க முடியாதா? நல்லா சொல்லுறீங்க கோணம்.

வெறும் இரண்டாயிரம் ரூபாய் பெறும் (அதுவும் பழசு) டிஸ்க்களை திருட இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்களே இந்த சிரிப்பு திருடர்கள்? ஓரு வேளை சிரிப்பு வங்கி ஊழியர்களோ?

துப்பாக்கிகள் தயார் நிலையில் இருக்கட்டும்... வேலை வருகிறது...

பழைய ஊழியர்கள் ஆரம்பகாலத்தில் 'பலான' படம் பார்த்திருப்பார்கள்... அது அப்படியே 'ஹார்ட் டிஸ்க்கில்' சேமித்திவைக்கப்பட்டிருக்கும் என்ற பயத்தில், அதைத்திருடி அழிக்க முற்பட்டிருப்பார்கள்... இந்த கோணத்திலும் விசாரணை நடத்தினால் நல்லது...

இவ்வளவு ரிஸ்க் எடுத்தது வெரும் கார்ட் டிஸ்கிற்காக என்று கூறுவது நம்ப முடியவில்லை. ஏமாற்றுவதற்காக மானிடரை திருடியிருக்கிறார்கள். உபயோகப் படுத்திய ஹார்டி டிஸ்கை வங்கியில் சென்றுதான் திருட வேண்டுமா? ஒரு கணிணி மையத்தில் கூட ரிஸ்க் இல்லாமல் திருடியிருக்கலாமே?

அந்த கணிணியில் உள்ள ஹார்ட் டிஸ்கில் கடன் பற்றிய விபரங்கள் இருக்கின்றன என்று திருடனுக்கு எப்படி தெரியும்? ஒரு வேளை திருடியவன் கணிணி சம்பந்தமான வேலை செய்பவனாக இருக்கலாம். அல்லது வங்கியில் ஏதாவது கணிணி ரிப்பேர் செய்திருக்கலாம். அல்லது அங்கு வேலை செய்பவர் துப்பு கொடுத்திருக்கலாம். அப்படி இல்லையென்றால் அவர் வங்கியின் முன்னாள் ஊழியராக இருக்கலாம்.

போலீஸ் யோசிக்காமலா இருக்கும்?

இது அமெரிக்கன் ஸ்டைலாக இல்லை!ரொம்ப படித்த கொள்ளை க்காரர்கள் போல் இருக்கிறது!

Displaying 1 - 13 of 13
Only Subscriber Can Post Comments
ஜூனியர் விகடன்
< 04 Mar, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook