• ஐபிஎல் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் மருமகனிடம் விசாரணை?
  • அரசு ஊழல்களை அம்பலப்படுத்திய சிஏஜி வினோத் ராய் ஓய்வு
  • சூதாட்டம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகளுடன் விண்டூ தாரா சிங்கிற்கு தொடர்பு?
  • பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
  • 'ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்கு முன்னதாகவே மைசூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சி'
22 May, 2013
அஞ்சல்வழிக் கல்வியால்தான் மு.வரதராசன் கிடைத்தார்..
அஞ்சல்வழிக் கல்வியால்தான் மு.வரதராசன் கிடைத்தார்.. அஞ்சல் அலுவலகம் என்பதே இன்று இளைஞர்களுக்கு எட்டப் போய்விட்டது. கொரியர்களும் செல்போன்களும் நிறைந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில், 'இந்திய அஞ்சல் வரலாறு தமிழ்நாடு - ஒரு கண்ணோட்டம்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற்றது.  சிறப்பு அழைப்பாளரான ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் பேசுகையில், ''கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தியை அறிவிக்கவும் மொழி பயன்படுகிறது. இதிகாசத்தில் இருந்து பார்த்தால், முதல் தபால் துறை ஊழியனும், முதல் காவலனும் கண்ணன்தான். இப்போது எத்தனையோ மீடியாக்கள் வந்துவிட்டன. செல்போனில்கூட தகவல் தெரிவிக்கிறோம். ஆனால் கடிதத்தில் நாம் படிக்கும் வார்த்தை களுக்கு தனி ஈர்ப்பு இருக்கிறது. என் அப்பா (எழுத்தாளர் உமா சந்திரன்) ஒரு போட்டிக்கு, 'முள்ளும் மலரும்’ நாவல் எழுதியபோது 10,000 ரூபாய் பரிசு கிடைத்தது. அதை முதலில் தகவலாகத் தெரிவித்து பரிசு தந்தவர் தபால்காரர்தான். வெயில், மழை என்று எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்பவர்கள் தபால்காரர்கள்.   இப்போது கொரியர். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 12

"விலை ஏற்றமில்லா ஏழை மக்களின் நண்பன் அஞ்சல் துறைதான்."-----> பார்த்துங்க, பிரணாப் முகர்ஜி கண்ணில் படப்போகிறது.

தலைப்பு சுவாரஸ்யாமக இருக்கலாம். ஆனால் சம்பந்தமில்லாமல் இருக்கக் கூடாது.

அஞ்சல் துறை பற்றிய அனைத்தும் சுவார்சியமானவைதான். ஆனால், இந்த கேடு கெட்ட சில அரசியல்வாதிகளாலும், சுய நலமி ஊழியர், அதிகாரிகளலும் தானே அஞ்சல் துறையும்,பி.எஷ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனஙளும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன..!! காரணம், தனியாரிடம் அவர்கள் பெறும் கையூட்டு...அதிலும், பல பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கண்ட தேவைகளை தனியாரிடமே கொடுக்கின்றன..

கொரியரோ ச்பீட் போச்டோ இன்ரும் போச்ட்மான் வரும்போது கேட்க்கும் மணியோசை , கிராமத்தில் இருக்கும் பெரியவாளுக்கு வரும் மனிஆர்டர் எல்லாம் மாராது

மு.வ.-வின் அறிவுக்கும், அஞ்சல் துறைக்கும் என்ன தொடர்பு? உண்மையில் மிகவும் ஒழுங்காக இருந்த அஞ்சல், தொலைத்தொடர்பு துறையை ஊழலும் தனியார் மயமாக்கும் அரசியலும் வேலையை குறைத்து சம்பளத்தையும் வசதிகளையும் அதிகமாக்கும் ஊழியர்களும் சேர்ந்து நாசப்படுத்திவிட்டனர்.

பாரத சமுதாயத்தின் நரம்பு மண்டலமே இந்த அஞ்சல் துறை தான்... இந்த அஞ்சல் துறையை தனியார் கொரியர் சேவைக்கு இனையாக உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்... அதை செய்ய வேண்டும் மத்தியரசு...

Hats Off Mr. Ramachandran.

முனைவர் மு வரதராசனார் ஒரு மாபெரும் தமிழறிஞர். அவரது சேவையால் ஏழை எளிய மக்களும், சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களும், கல்வியின் மீது தனியாத ஆர்வம் கொண்டவர்களும் உயர்கல்வி கற்க வழி செய்தவர் முனைவர் மு வரதராசனார்.

அவரால் அஞ்சல் துறைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்லலாம். அஞ்சல் துறையின் சேவை போற்றத்தகுந்தது என்பதில் சந்தேகமேயில்லை. அதற்காக இந்த கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பினை வைத்தது தமிழறிஞரை அவமரியாதை செய்வது போன்றது என்பதில் சந்தேகமேயில்லை.

போஸ்ட் மாஸ்டருக்கும், அங்க வேலை செய்யுறவங்களுக்கும் சம்பளம் தவறாம் கிடைக்குத்துல்ல. அப்புறம் அது நஷ்டத்துல போனா என்ன , நாசமா போனா என்ன?

தமிழ் சினிமாவில்தான் படத்தின் பெயருக்காக எதாவது காட்சியில் பெயரை ஒரு வசனமாக நுழைத்து விடுவார்கள். விற்பனைத்தந்திரமாக சில தினசரி பத்திரிகைகளிலும் பரபரப்பான செய்தி தலைப்பு கொடுத்துவிடுகிறார்கள். விகடனும் இந்த போலியில் சேர்ந்திருப்பது வேதனையாக உள்ளது. - முவ வுக்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பு ஏற்படுத்திய முயற்சி, ஆசிரியர் குழுவில் ஒருவரும் இதை சரிபார்க்கவில்லயோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கொரியர் சர்வீஸ்கள் பெருகி வருவது அஞ்சல்துறை ஒன்று தேவை என்பதைத்தான் உணர்த்துகிறது. மிகச் சிறந்த சேவையும், நெட்வொர்க் அமைப்பும், பொறுப்புணர்வும் மிகுந்த நமது அஞ்சல்துறையைப் பாதுகாப்பது நமது கடமை!

கொரியர் சர்வீஸ்கள் பெருகி வருவது அஞ்சல்துறை ஒன்று தேவை என்பதைத்தான் உணர்த்துகிறது. மிகச் சிறந்த சேவையும், நெட்வொர்க் அமைப்பும், பொறுப்புணர்வும் மிகுந்த நமது அஞ்சல்துறையைப் பாதுகாப்பது நமது கடமை!

Displaying 1 - 12 of 12
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 08 Apr, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook