''முதல்வர் தொகுதியில் அனாதையாகப் போயிட்டோமே..'' 'முதல்வரைத் தேர்வு செய்தவர்கள் என்று எங்கள் ஸ்ரீரங்கம் மக்கள் பெருமையுடன் தலை நிமிர்ந்து நின்றார்கள். இப்போது எங்கள் குறைகளைக் கேட்பதற்கு யாருமே இல்லையே என்று தடுமாறுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா?’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குப் (044-66808002) புகார் வந்தது. விசாரித்தோம். ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று அமோக வெற்றி பெற்றார் ஜெய லலிதா. அந்தத் தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் தான் நேரடியாகச் செய்யமுடியாது என்பதால், பொது மக்களின் குறைகளைக் கவனிக்க தன் தொகுதி அலுவலகத்தில் இரண்டு உதவி யாளர்களையும், அவர்களைக் கண்காணித்து வேலை வாங்க தொகுதிப் பொறுப்பாளராக பரஞ்சோதியையும் நியமனம் செய்திருந்தார். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. மரியம் பிச்சையின் மரணத்தைத் தொடர்ந்து, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட பரஞ்சோதி, வெற்றிபெற்று அமைச்சரானார். அதனால், முதல்வர் தொகுதியின் பொறுப் பாளர் பதவியை செவ்வனே செய்ய இயலவில்லை. உடனே, தனக்கு உதவியாளராக வலம் வந்த வி.என்.ஆர்.செல்வம் என்பவரை முதல்வரின். . .
ஆண்டிபட்டி தேர்தலின் போது, அரசபட்டி ஆக்குவேன் என்றார்? அது போண்டிபட்டியா கிடக்குது. ஸ்ரீரங்கத்தை எதுவோ மாற்றுவேன் என்று சொன்னார். இனி அந்தபக்கம் தலைகாட்டமாட்டார் பாருங்களே? தீவாளி, தீவாளிக்கு மட்டும் குளிப்பார். அவ்ளோதான்.
தொகுதி மக்களே, கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் புது மாப்பிள்ளை போல் கல்யாண விருந்து எதிர்பார்த்தால் எப்படி. விருந்தெல்லாம் ஒரு மாதம் தான். நாடாளுமன்ற தேர்தல் வரும். அப்போது தொகுதிக்கு வந்து அமைச்சர்கள் அனைவரும் உங்களுக்கு பணி செய்து கிடப்பார்கள். அதுவரை அமைதியா இருக்கணும் சரியா..
COMMENT(S): 10
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் நிலைமை பரிதாபம்தான்.
No. Tamil Nadu மக்கள் நிலைமை தான் பரிதாபம்.
ஆமாமாம்.. தமிழ் நாட்ல மீதமுலள்ள 232 தொகுதிகளிலும் பாலாறும் தேனாறும் தான் ஓடுகிறது..சரிதானே சங்கர்..?
ஆண்டிபட்டி தேர்தலின் போது, அரசபட்டி ஆக்குவேன் என்றார்? அது போண்டிபட்டியா கிடக்குது. ஸ்ரீரங்கத்தை எதுவோ மாற்றுவேன் என்று சொன்னார். இனி அந்தபக்கம் தலைகாட்டமாட்டார் பாருங்களே? தீவாளி, தீவாளிக்கு மட்டும் குளிப்பார். அவ்ளோதான்.
ஸ்ரீரங்கம் தொகுதியை மேம்படுத்தாமல் விட மாட்டார் ஜெயலலிதா.. இந்த கட்டுரை வேறு இன்னும் அதிக அழுத்தத்தை ஜெயாவுக்கு நிச்சயம் தரும்,..
ஜெ பாட்டிக்கு..திருச்சி யின் தி மு க தூன்கலை போட்டுத்தள்ள மட்டும்தான் நேரமிருக்குன்னு நினைக்கிரேன்.
ஸ்ரீரங்கம் மக்களுக்கு அதிமுக ' பட்டை நாமம்' போட்டுவிட்டதா ?.
சொந்த வீடடிலேயே என்ன நடக்குதுன்னு தெரியல இவருக்கு, இவர்தான் தொகுதி வீட்டுகளை கவனிக்கப்போகிறாரோ.
தொகுதி மக்களே, கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் புது மாப்பிள்ளை போல் கல்யாண விருந்து எதிர்பார்த்தால் எப்படி. விருந்தெல்லாம் ஒரு மாதம் தான். நாடாளுமன்ற தேர்தல் வரும். அப்போது தொகுதிக்கு வந்து அமைச்சர்கள் அனைவரும் உங்களுக்கு பணி செய்து கிடப்பார்கள். அதுவரை அமைதியா இருக்கணும் சரியா..
முதல்வர் தொகுதி- எதிர் கட்சி தலைவர் தொகுதி இரண்டுமே அனாதை தொகுதி ஆகி விட்டது.