அமைச்சர் வந்தும் பிரச்னை தீரவில்லை... 'திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் உள்ள மீன் வளர்ச்சிக் கழகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று, தமிழக அரசுக்குப் புகார் மேல் புகார் போய்க்கொண்டே இருந்தன. அதனால், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் திடீர் விசிட் அடித்து, ஆய்வு நடத்தி இருக்கிறார்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) தகவல் வந்தது. தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, பர்வத ராஜகுல மீனவர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணி இருவரும் நம்மிடம் இதுபற்றிப் பேசினார்கள். ''மீனவர்களான நாங்கள் காலம் காலமாக சாத்தனூர் அணையில் மீன் பிடித்து, மீன் வளர்ச்சிக் கழகத்திடம் கொடுத்து வருகிறோம். ஆனால், நாங்கள் பிடித்துத் தரும் மீன்களுக்குச் சரியான கூலி கொடுப்பது இல்லை. ஒரு கிலோ மீன் பிடித்துக் கொடுத்தால் ஐந்து அல்லது 10 ரூபாய்தான் கொடுப்பார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் நடத்தினோம். அதையடுத்து, இப்போது கிலோவுக்கு. . .
அண்ணாதுரை வீரப்பன் மாதரி மீசை வைத்துக் கொண்டு காந்தியம் பேசினால் எடுபடுமா இந்த அரசாங்க திருடர்களிடம்? மீனை பிடிச்சோமா வெளிய வித்தோமான்னு இருக்கனும். டாக்டர் கலாம் ஐடியா கொடுத்த மாதரி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மூன்றில் ஒரு பங்கு அரசாங்க திருடர்களிடம் கணக்கு காட்டினால் ஜெயக்குமார் மாதரி வாழ்கையில் ஜெயிக்கலாம்.
COMMENT(S): 2
எப்படியோ ஊரார் பிரச்சனையால், அமைச்சர் ஜெயபாலுக்கு மீன் குழம்பு சாப்பாடு கிடைத்திருக்கும்...
அண்ணாதுரை வீரப்பன் மாதரி மீசை வைத்துக் கொண்டு காந்தியம் பேசினால் எடுபடுமா இந்த அரசாங்க திருடர்களிடம்? மீனை பிடிச்சோமா வெளிய வித்தோமான்னு இருக்கனும். டாக்டர் கலாம் ஐடியா கொடுத்த மாதரி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மூன்றில் ஒரு பங்கு அரசாங்க திருடர்களிடம் கணக்கு காட்டினால் ஜெயக்குமார் மாதரி வாழ்கையில் ஜெயிக்கலாம்.