அரசுக்குப் பணம் அம்போ! 'கேபிள் டி.வி-யில் நிலவும் தனியார் ஆதிக்கத்தை அகற்றி அரசே கேபிள் டி.வி-யை நடத்தும்’ என்று தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு, அ.தி.மு.க-வினரே ஆப்பு வைக்கிறார்கள் என்பதுதான் ஈரோட்டுப் புலம்பல். அம்பேத்கர் கேபிள் நெட்வொர்க் உரிமையாளர் மின்னல் முருகேஷ் நம்மிடம் பேசினார். ''ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஏரியாக்களில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் என்றும், அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனிலோ, அரசு கேபிள் தாசில்தாரிடமோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தார்கள். ஆனால், சொன்னபடி எங்குமே விண்ணப்பம் கிடைக்கவில்லை. நானும் விண்ணப்பத்தை வாங்க தாசில்தார் வாசுதேவனை சந்திக்க பல முறை சென்றேன். அவர் அலுவலகத்திலேயே இல்லை. அதன் பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை வேறு ஒருவர் மூலம் பெற்று அனுப்பி வைத்தேன். முறையாக யாருக்குமே விண்ணப்பங்களைக் கொடுக்க முடியவில்லை. ஆனாலும், கடந்த மாதம் 16-ம். . .
COMMENT(S): 1
நாய் வாலாட்ட வில்லையென்றால் தான் ஆச்சரியம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..