பூட்டிய தொழிற்சாலைகளுக்குள் வில்லங்கம்! 'கரூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த இரண்டு அரசு நிறுவனங்கள் தற்போது மூடப் பட்டுக்கிடக்கின்றன. அந்த நிறுவனங்களின் மதிப்பு வாய்ந்த இயந்திரங்களை யார் யாரோ திருடுகிறார்கள். அங்கே சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன’ என்று தகவல் வரவே, விசாரணையில் இறங்கினோம். அண்ணா தொழிற்சங்க கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் நாகராஜன் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''மாயனூரில் இருக்கும் டான்செம் தொழிற்சாலை 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 8.5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது. அங்கு ஆஸ்பெட்டாஸ் ஷீட்டுகளும், சிமென்ட் குழாய்களும் தயாரிக்கப்பட்டன. அந்த ஆலைக்கு என்றும் சிக்கல் வரக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில், 'உற்பத்திப் பொருட்களை குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி என்று அரசுத் திட்டங்களுக்கு மட்டுமே விற்கவேண்டும்; தனியாருக்கு விற்க அனுமதி இல்லை’ என்று அரசு ஆணை போடப்பட்டது. இங்கு தயாரிக்கப்பட்ட பொருட்கள் தரமாகவும் உறுதியாகவும் இருந்ததால், பிற மாநில அரசுகளும்கூட அரசுத் திட்டங்களுக்காக ஆர்டர். . .
கரூர் எஸ்.பி சந்தோஷ்குமார் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம். இதுவரை எங்களுக்கு எந்த புகார்களும் வரவில்லை!! இப்படி புகார் வரட்டும் என்று காத்து கொண்டே இருங்கள் உருப்புடும்.
COMMENT(S): 3
"அரசு பொருள்களை திருடுவது தண்டனைக்குரிய குற்றம்"...அப்போ மத்ததை திருடினா தண்டனை இல்லாத குற்றமா இல்ல குற்றமே இல்லயா?
பூட்டிய ஆலை பற்றி யார் புகார் கொடுப்பார்கள்..அங்கு வேலை செஞ்சவங்களே அல்லாடிகிட்டு இருப்பாங்க.
கரூர் எஸ்.பி சந்தோஷ்குமார் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுசென்றோம். இதுவரை எங்களுக்கு எந்த புகார்களும் வரவில்லை!! இப்படி புகார் வரட்டும் என்று காத்து கொண்டே இருங்கள் உருப்புடும்.