தெற்கு மண்டல லைவ் காட்சிகள்!டூருக்கு நேரமாச்சு! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கட்சிக்காக ஜெயிலுக்குப் போனதைத் தவிர எந்தப் பலனையும் அறியாத சீனியர்கள் நான்கைந்து பேர் மட்டும் 15 நாட்களுக்குத் தேவையான 'டூர் கிட்’டுடன் பக்காவாய் வந்திருந்தனர். ஜாலியாய் வந்த இளசுகள் அதைப் பார்த்து திக்கென்று அதிர்ந்தனர். அத்தனை பேரையும் வழி நடத்திச் சென்றார் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன். போலீஸுக்கு வேலையே வைக்காமல், 'எல்லாரும் வண்டியில ஏறுங்கப்பா’ என்று அத்தனை பேரையும் ஏழு பஸ்களில் ஏற்றிவிட்டு, அப்புறமாய் ஏறினார் விவரமான பெரியகருப்பன். எல்லாம் முடிந்து கிளம்புகையில், ''ஊர்வலமாப் போனாங்கன்னு போட வேண்டாம் ப்ளீஸ்...'' என மீடியாக்களிடம் கோரிக்கை வைத்தார் மாவட்ட எஸ்.பி-யான பன்னீர் செல்வம். 'ஊர்வலமா ஏன் போக விட்டீங்க?’ என்று மேலிடம் கடிக்குமாம்! காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் 180 பேர்தான் முதலில் கைதானார்கள். அவ்வளவுதான் என்று போலீஸார் நினைக்க, 'யப்பா... நாங்களும் ஜெயிலுக்குப் போறோம்...’ என்று கூவிக்கொண்டு. . .
கட்சி என்ன லட்சனத்தில் இருக்கிறது என்பதை கருணாநிதி பார்த்து கொள்ளட்டும்.. இனியாவது தனது குடும்பத்தினரை உள்ளே இழுத்து போட்டு கட்சியை காலி செய்யாமல் இருப்பாரா???
COMMENT(S): 5
கட்சி என்ன லட்சனத்தில் இருக்கிறது என்பதை கருணாநிதி பார்த்து கொள்ளட்டும்.. இனியாவது தனது குடும்பத்தினரை உள்ளே இழுத்து போட்டு கட்சியை காலி செய்யாமல் இருப்பாரா???
ஏனுங்க, தென் மண்டலத்தில் மதுரை கிடையாதுங்களா? அது என்ன ஒரு அடாவடிக் கும்பலின் தனி மண்டலமா?
இது போன்ற அரசியல் திருவிழாவை வேறு எந்தக்கட்சியில் பார்க்க முடியும்?.
உள்ள போயே ஆகணுமுன்னு அடம் புடிக்கிறது, புடுச்சு போட்டா ஜாமீன் கேக்குறது, ஒரே அழுக்காச்சி ஆட்டம் அடுறது, இவனுங்களோட இதே லொள்ளா போச்சு!
அருமையான இதழ்.வீ.பட்டாபி ராமன்