• ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
  • பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு
  • சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல்
  • கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை
  • இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே
  • கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..
  • தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
  • தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
  • போலீசுக்கு தண்ணி காட்டிய துப்பாக்கி ஆசாமி சிறையில் அடைப்பு
  • ஐ.பி.எல். போட்டியில் இருந்து சன் ரைசர்ஸை வெளியேற்றியது ராஜஸ்தான்
  • ஐ.பி.எல். சூதாட்டம்: மேலும் 3 வீரர்கள் கைதாகிறார்கள்
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் மத்திய அமைச்சர்கள்: சுப்பிரமணியன் சுவாமி திடுக் தகவல்
  • பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் வீட்டில் சோதனை: சிபிசிஐடி மறுப்பு
23 May, 2013
தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?
தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா? காவல் நிலையத்தில் நடப்பது எல்லாமே சந்தேகமாகவும் சர்ச்சைக்கு உரியதா கவுமே மாறிவிடுகிறது!  சமீபத்தில் சென்னை, கானத்தூர் காவல் நிலையத்தில் நடந்த மரணம் சென்னையை உலுக்கி எடுத்தது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''குடும்ப அட்டை வைத்திருக்கும் ஏழை களுக்கே மண்ணெண்ணெய் முறை யாகக் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் ஏது மண்ணெண்ணெய்? விசாரணைக் கைதியை தீயிட்டுக் கொல்வதற்காகவே வாங்கி வைத் தார்களா? 'பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்தப் பசங்களா’ என்ற உடுமலைக் கவிராயரின் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது'' என்று இந்தப் பிரச்னையின் வேகத்தை அதிகரித்து இருக்கிறார். கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர்தான் மரணம் அடைந்த தையல் தொழிலாளி ஹுமாயுன். என்ன நடந்தது என்று அவரது மனைவி கௌகர் யாஸ்மினிடம் கேட்டோம். ''எங்க வீட்டுக்காரர் தையல் வேலையும், கிடைக்கிற கூலி வேலைகளும் செய்வார். எங்களுக்கு மூணு பசங்க. நானும் வீட்டு. . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 16

இதுவரை நடைபெற்ற தீக்குளித்தல் சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் என்று பார்த்தால், வேறு யாராவது ஒருவர் தேர்ந்தெடுத்த பிறகு, பேசித் தயார் படுத்தப்பட்டார், அல்லது நாடகம் என்று சொல்லி எதிர்பாராமல் ஏமாற்றப்பட்டார் என்பது போன்ற காரணங்கள் தான் மிஞ்சும்!!!!! இன்றைய சமுதாயத்தில், தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு, தனது குடும்பத்தைக் கைவிடும் அளவிற்கு எந்த ஒரு காரணமும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது... சொந்தக் காரணாங்களால் நடந்து விடும் தற்கொலைகளை இதில் சேர்க்க முடியாது.

கவனமெல்லாம் 'சம்திங்'கில் இருக்கும்போது மற்ற விஷயத்தில் கவனக்குறைவு இருக்கத்தானே செய்யும்.மண்ணெண்ணை ஸ்டேசனுக்குள் வர காரணமான கேஸ் எது?விசாரிக்க வேண்டும்.

This is a clear case of human rights violation. There should be impartial inquiry and necessary action should be taken without usual delay. Government should pay a minimum compensation of two million rupees.

அட பாவிங்களா, ஏழைங்க என்றால் அவ்வளவு இளக்காரமா? கோடி கோடியா திருடினவங்களுக்கு ராஜ மரியாதை தரும் நாடு தானே அது.

தமுமுக இன்று பிரபலமடைந்து எம்.எல்.ஏக்களை பெற்றிருப்பது அவர்களின் 20 ஆண்டுகால உழைப்பின், சேவையின் வெற்றி. இது போன்ற ஏழை,பாமர மக்கள் பிரச்சனையில் நீதி வேண்டி நிறையவே போராடுகின்றனர்.

கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட மூன்று பேரும் முன்பே என்ன பேச வேண்டும் என்று சொல்கிறீர்கள்?. தீக்குளிப்புக்கு அப்புறம்தான் தமுமுக உள்ளே வருகிறது, அப்படித்தான் வரவேண்டிவரும். நியாயம், நீதி கிடைக்காதபோதுதான் சமூக அமைப்புகள், இயக்கங்களின் உதவி தேவை. குற்றவாளி எனும்போது அங்கே தமுமுக ஆஜர் ஆகத்தேவையில்லை, ஆகவும் ஆகாது. ஒரு பிரச்சனையில் நானே நேரில் கண்டது.

பொறுப்பில்லாத பதில். நியாயமாக விசாரணை நடக்குமா? போலீஸ் ஸ்டேஷனில் கற்பழிப்பு, கொலை என்று நடந்தால் நாடு விளங்கிடும். நாசமா போகட்டும் குற்றம் செய்தவர்கள்.

நகை காணாமல் போனல் சம்பாதிக்கலாம். ஹுமாயுனின் உயிரை யார் கொடுக்க முடியும். நகை காணாமல் அதற்கு பொறுப்பு அவர்களே தானே காரணமே தான் தவிர வீட்டுக்கு வேலைக்கு வந்தவர்கள் அல்ல. போலீஸில் புகார் கொடுத்தவர்கள் மேலேயும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகையை வேறு இடத்தில் வைத்து விட்டு கூட மறதி காரணமாக கூட அவர்கள் போலீஸில் புகார் கொடுத்து இருக்கலாம்.

சரியான ராஸ்கல்ஸ்

கண், மண் தெரியாமல் அடித்தால் எப்படி ஒரு ஆள் உயிரோடு இருக்க முடியும்!

another poor indian citizen has been killed mercilessly. vaalha indian democracy!

ஏழைகள் என்றால் இப்படித்தானா?ஏழைகளுக்கு வாழ உர்ரிமை இல்லையா?ஏழகள் தான் திருடுவார்களா?

வஎறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணை எதற்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்தது? கோர்டில் அல்லவா இருக்க வேண்டும் அங்கே உள்ள நீதிபதிகளின் வசதிக்காக?

சம்பந்தப்பட்ட மூன்று பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.இப்போது போலீஸைக் குறை சொல்லும் த.மு.மு.க.வினர் சம்பந்தப்பட்டவர்களிடம் முன்பே பேசி ஒரு தீர்வுக்கு வந்திருந்தால் அநியாயமாக ஒரு ஏழைத் தொழிலாளியை இழந்திருக்க நேர்ந்திருக்காது.'போலீஸ் ஸ்டேஷன் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்குப் போட்டுக் கொண்டார்'என்ற பழைய புராணத்தைத் தற்போது போலீஸ் மாற்றிக் கொண்டுள்ளது போலிருக்கிறது.

கடும் கண்டனங்கள். அதே நேரத்தில் போலீஸூக்கு அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்று கேள்வியை யார் கேட்பது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. இவர்கள் கையில் எடுக்காத அதிகாரங்களா?!

ராஜேந்திரன் சொல்வதில் எங்கள் கவனக்குறைவால்தான் இந்த சம்பவம் (கொலை) நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம். என்பது மட்டுமே உண்மை மற்றபடி ராஜேந்திரன் சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய்.

Displaying 1 - 16 of 16
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 22 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook