• பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க பொன்முடி எதிர்ப்பு!
  • மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா இன்று பதவி ஏற்கிறார்
  • பிரதமர் மன்மோகன்சிங் வேட்பு மனு ஏற்பு
  • நடிகர் சஞ்சய்தத் புனே சிறைக்கு மாற்றம்
  • நான் அப்பாவி, எந்த தவறும் செய்யவில்லை-சொல்கிறார் ஸ்ரீசாந்த்
22 May, 2013
கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள் பொன்விழி, அன்னூர்.    அறிஞர் அண்ணா இப்போது தமிழக சட்டசபையில் இருந்தால்...?   அண்ணா முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விநாயகம் 'உங்கள் ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் தலைதூக்குகின்றன’ என்று சொன்னார். 'அதை நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார்’ என்று அண்ணா பகிரங்கமாக அறிவித்தார். உடனே, விநாயகம் பேசாமல் உட்கார்ந்து விட்டார். கூட்டம் முடிந்ததும் அண்ணாவைத் தனியாகச் சந்தித்த விநாயகம், யாருடைய துறையில் முறைகேடு நடந்தது என்பதைச் சொன்னதும் அண்ணா ஆடிப்போனார். அந்த அமைச்சர்கள் இருவரையும் உடனடியாக அழைத்தார்... கண்டித்தார். எதிரிகளே ஆண்டாலும் தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவரும்... தம்பிமார்களே அமைச்சர்களாக இருந்தாலும் தவறு செய்துவிடக் கூடாது என்று நினைக்கும் முதல்வரும் இருந்த காலம் அது. இன்று...?  ஸ்ரீ உஷா பூவராகவன், படியூர், திருப்பூர். அடுத்த ஜனாதிபதி யாராக இருக்கும்?   யார் வரப்போகிறார்கள் என்பதைவிட யாரெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்பது லேசாகக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 66

ஐய்யா, தங்களின் பெயர் என்ன என்று சரியாக தெரியவில்லை! மன்னித்துக் கொள்ளுங்கள்! பலருடைய கருத்துகளுக்கு மறுகருத்து அளித்துள்ளீர்கள்!அதில் என்னுடைய கருத்திற்கும் பதில் அளித்துள்ளீர்கள்!நன்றி! கருணாநிதி கூட்டணியில் தவறு செய்தார்தான் இல்லை என்று சொல்லவில்லையே! அந்த தவறுக்குப் பிறகு செயலலிதாவைப் போல், சொன்ன வாக்குறுதியை காலில் போட்டு மிதித்துவிட்டு கழுத்தை அறுத்து நம்பிக்கைத் துரோகம் செய்ய வில்லையே!இன்னமும் புரியாவிட்டால் தவறு என்னிடத்தில் இல்லை!

அதை நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார்’

யாருடைய துறையில் முறைகேடு நடந்தது என்பதைச் சொன்னதும் அண்ணா
ஆடிப்போனார். அந்த அமைச்சர்கள் இருவரையும் உடனடியாக அழைத்தார்... கண்டித்தார்.

அப்படின்னா பதவி விலகலையா? வெறும் கண்டிப்பு தானா?

@அன்பு......"'அதை நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார்’ என்று அண்ணா பகிரங்கமாக அறிவித்தார்"------------> விநாயகம் அதை நிரூபித்த பின்னர் வாய்சவுடால் விட்ட அண்ணாத்துரை பதவி விலகவில்லை. இதுதான் திராவிட கலசாரம். பதவி தோளில் போட்ட துணி என்று சொல்லுவதெல்லாம் பம்மாத்து. பதவி சுகம் இல்லாமல் இந்தக் கும்பலால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. 45 ஆண்டுகளாகக் கவர்ச்சியாகப் பேசி ஏமாற்றி கொள்ளை அடித்த கூட்டம் இது.

-------இது ஜெ.வையும் சேர்த்து தானே--------.

தேவன், என்னது நம்ம ஜனாதிபதிக்கு சமைக்கத் தெரியுமா? அவருக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சேன், பராவயில்லை இதையாவது தெரிஞ்சு வச்சுருக்காரே!

@Mannar Mannan

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க!! குஜராத் கலவரம் பொது அது ஒரு மாநிலத்துக்குள் நடக்கும் விவகாரம், மத்திய அரசுக்கும் அதற்கும் கொள்கை தொடர்பு இல்லை ன்னு ஒரு உலக மகா விளக்கம் கொடுத்தவர் கருணா. அப்படி பார்த்தல் பாஜக அயோத்தியில் நடத்தியது உத்திரப் பிரதேச பிரச்சனை, அப்புறம் எப்படி பாஜக மதவாத கட்சியாகும்? கலவரங்கள் நடந்து மறந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது மட்டும் குஜராத் கலவரம் தேசப் பிரச்சனையாகிவிட்டது?

பிஜேபி யுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொண்ட விதம் ஒன்றே இதனை சொல்லும். முரசொலி மாறன் மறைவுக்கு வந்த பாஜக தலைவர்கள் டெல்லிக்கு கூடா திரும்பாத நிலையில் கூட்டணி மாற்றம்!! அதுவரை அரசு செலவில் மாறனுக்கு அமெரிக்காவில் மருத்துவ செலவு செய்ய வேண்டியிருந்தது, அதன் பிறகு வழக்கம் போல கொள்கை கூட்டணின்னு அடுத்த கொள்ளைக்கு தயாரானார்.

ஒரு மதத்தை சார்ந்தவர்கள் கொல்லப்பட்டதை மதவாத கட்சி என்று சொல்லும் தலைவர், இரு இனமே அழிந்து கொண்டிருக்கும் போது, அதுவும் வங்கதேசத்துக்கு இந்தியப் படைகள் அனுப்பவில்லையா என்று மத்திய அரசையே கேள்வி கேட்டவர், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றதும் தமிழகம் தாண்டாத போராட்டங்கள் நடத்தி காங்கிரஸ் அரசை தாங்கிப் பிடித்தது ஏன்?. முல்லை பெரியாறு அணிக்கு எதிர்ப்பு தெருவிக்க கூட மதுரையில் கூட்டம் என்று சொல்லி, ராசாவின் அலுவலகத்தில் சிபியை ரைடு என்றதும் கூட்டமும் கிடையாது என்று பல்டி அடித்தவர் தான் உண்மை சொல்பவரா? இது தான் கருணாவுடன் நிலைபாட்டில் உள்ள மாற்றமா? சினிமா பிரச்சனைக்கெல்லாம் முதல்வர் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று சொல்பவர் கூடங்குளம் பிரச்சனைக்கும் மீனவர் பிரச்சனைக்கும் மத்திய அரசிடம் நேரில் சென்று சொல்வதெல்லாம் கிடையாது. கூடங்குளம் தானாகவே தீரும், மீனவர் பிரச்சனைக்கு கட்சி பொதுக் குழு தீர்மானம் மட்டும்.

லட்சம் பேரை கொன்று குவித்து இன்றைக்கு உலகநாடுகளே போர் குற்றம் பற்றி பேசும் போதும் மவுனியாக இலங்கைக்கு உதவும் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டு போவது தான் கருணாவின் நிலைபாட்டில் உள்ள மாற்றம். ராசாவும் கனிமொழியும் சிக்க வில்லை என்றால் தமிழர் பிரச்சனை என்று சொல்லி அடுத்த கூட்டணிக்கு அச்சாரம் போட்டிருப்பார். காங்கிரஸ் கட்சியால் நமது மீனவர்களை பாதுகாக்க கூட முடியவில்லை இல்லை மனம் இல்லை. கேரளாவில் மீனவர்கள் சுடப் பட்டால் உடனே கப்பலை வளைத்து பிடித்து நடவடிக்கைகள் வேகமாக நடக்கு, நம் மீனவர்கள் சுடப் பட்டால் மட்டும் இலங்கைக்கு சென்று பேசுவார்கள், பிரச்சனை தீர்ந்தது என்பார்கள் மறுநாளே மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடக்கும், மீண்டும் பேசுவோம் என்பார்கள். ஆனாலும் கடைசி வரை காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி

>>அவர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறார்!<< ஆனா, அதிமுக அனுதாபிகளுக்கு இது புரியாது....

பாஜக மதசார்பு கட்சி என்றால், முஸ்லீம் ஓட்டுக்கு போராடும் காங்கிரசும் தி மு க? அ தி மு க?? எந்த சார்பு????

முதல.."நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார்"

அப்பறம் ஆளு தெரிஞ்சப்பறம் வெறும் "ைத்தார்... கண்டித்தார்."??? தேவையில்லாமல் சிலரை பெரிய ஆளாக்குவது இதுதானோ?

நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியுடந்தான் கூட்டணி

குஜராத் கலவரம் போது பாஜக ஆட்சியில் பங்கு பெற்று அவர்களை தாங்கிப் பிடித்தது திமுக, அப்போது பாஜக ஒரு நடுநிலைக் கொள்கை கொண்டது, திமுக கூட்டணி மாறியதும் அது ஒரு மதவாத கட்சி

தமிழர் அழிப்பின் போது காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்று அவர்களை தாங்கிப் பிடித்தது திமுக, இப்போது காங்கிரஸ் ஒரு நடுநிலைக் கொள்கை கொண்ட கட்சி, நாளை திமுக கூட்டணி மாறினால் காங்கிரஸ் ஒரு இன அழிப்பு கட்சி

கூட்டணி மாறியும், பதவியில் ஒட்டிக் கொண்டு, கடந்து வந்த கூட்டணியை காரித் துப்புவதில் பாமகவுக்கு முன்னோடி திமுக தான்.

அண்ணாவைக் காட்டிலும் விநாயகத்தின் அரசியல் நாகரீகம் தெரிகிறது.

குற்றம் தெரிந்தும் மக்கள் மன்றத்தில் சொல்லாமல் தனியாக சொன்னார்,
குற்றம் தெரிந்தும் மக்கள் மன்றத்தில் சொன்ன வாக்குறுதியை காற்றில் விட்ட அண்ணா!!

ஊழலுக்கு தண்டனை கண்டிப்பா? அதுதான் இப்போது ஊழலுக்காக ஜெயிலுக்கு போனால் கட்சிப் பதவி வரை வளர்ந்து இருக்கு

"அவர் எப்போதும் அப்படியேதான் இருக்கிறார்" - அனியாயத்துக்கு நீங்கதான் தேவைக்கு ஏற்ப அவர் மாறிட்டார்ன்னு மாறிட்டார்ன்னு பொலம்புறீங்க..

சுந்தர் சார், ஜனாதிபதி, இந்திரா வீட்டில் சமையல் செய்ததாக ஒரு உ.பி. காங்ரஸ்காரர் சொன்னார். அவங்களுக்கு தெரிந்த விடயத்தைதானே குறிப்பு சொல்லுவாங்க....... வேனும்னா இந்த முறை ஜனாதிபதி மாளிகையின் தலைமை சமையல் பணிக்கு போட்டியிடலாம் ........

'தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்', நல்ல வேளை காமராஜரைத் தோற்றது.

அவர் போன்ற சான்றோர், இக்கால அரசியல் வியாதிகள் மற்றும் இத்தாலி காங்கிரஸாருடன் வாழ்வதை நினைத்து பாருங்க.

அதற்கு தோற்றதே ரொம்ப நல்லது.

காங்கிரஸ் ஆட்சி போனால் ஈழத்தமிழர் விமோசனம் அடைவர் என்பது கனவு.பிஜேபியோ வேறெ கட்சியோ காங்கிரஸ் காட்டும் அக்கறை கூட் காட்டாது

@அன்பு கழுகாரின் பதிலில் உள்ள கருத்தை தவறாகப் புரிந்துள்ளீர்கள். விநாயகம் அவையில் அதை ஏன் நிரூபிக்கவில்லை என்பதுதான் அவரின் நாகரீகம் என்று கழுகார் உணர்த்துவதை ஏன் புரிந்து கொள்ளவில்லை? அவையில் நிரூபித்து அண்ணாவை வெளியேற்றாப் பெருந்தன்மையை கழுகார் நாசூக்காகச் சொல்லியுள்ளார்!

இரென்டுல்ல ஒன்னு நம்ப மு க, ரெண்டாவது யாரு?

ரமேஷ் சிங்கப்பூர் அவர்களே! கருணாநிதி சொன்னது பொய் அல்ல! ஏற்கனவே மதவாத கட்சியுடன் கூட்டணி சேர்ந்த பிறகு அவரது நிலைப் பாட்டில் மாற்றம் கண்டதினால் மதவாத கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார்! ஆனால் செயலலிதா சொன்னது பொய் மட்டும் அல்ல! வாக்குறுதியை மீறுவது! நம்பிக்கைத் துரோகம்! இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறாதீர்கள்! கருணாநிதி பொய் மட்டும் சொல்லுவார்.... அட டா அப்புறம்...!!!

நாட்கள் எண்ணப்படுகின்றன, அடிகள் எண்ணப்படுகின்றன என ஆங்கில உரையாடல் நடத்தியது காங்கிரசு எதிர்கட்சித் தலைவர் கோவைக் கம்பன் கருத்திருமனும், அண்ணாவும்.

தமிழனை அழிக்க படைகளை ஏவிய ராஜீவ் மட்டும் தமிழின துரோகி இல்லை, அவர் தமிழரின் நன்பேடா

பாஜக மதசார்பு கட்சி என்றால், முஸ்லீம் ஓட்டுக்கு போராடும் காங்கிரசும் மற்ற கட்சிகளும் எந்த சார்பு?

மன்னர் மன்னா, ஜெயும் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் கருணா பொய் மட்டும்தான் சொல்லுவாரு......

மன்னர் மன்னன், கழுகாருக்கு ஜெயாவின் மேல் அப்படி ஒரு அபிமானம், பிரியம்..... அவர் அப்படித்தன் எழுதுவார், பேசுவார்.

அவரவர் தனிப் பட்ட விருப்பத்திற்கு முன் நாம் குறுக்கே நிற்கவா முடியும்.

இந்தியாவை காங்கிரஸ் ஆளும்வரை சிரிலங்கா பிரச்சினை முடிவுக்கு வாராது.திமுக சேரம் போய்விட்டது. பணம் பன்ன சொந்த இனத்தை விற்று திமுக தமிழின துறோகி ஆகிவிட்டது. அதர்க்காக ஜெஜெ தமிழினம் காப்பாற்றூவார் என கணவு கான வேண்டாம். ஈழ தமிழர்களும் ராஜீவை கொன்று இனத்தை அழிக்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள். தமிழகத்தில் முகவை துறோகி என்றால், ஈழத்தில் பிரபாகரனும் ஒரு தமிழின துரோகியே. இவர்கள் செய்த செயள்கள் சுய நலத்திர்க்காக என்று ஆகிவிட்டது.வரும் பாராளுமன்ற தேர்தலிள் காங்கிரஸ் தோற்று, வேரு கட்சி ஆட்சி செய்தால் இந்த பிரசினை தீரலாம். அஹுவும் தமிழகம் எப்படி நடக்கும் என்பதை பொருத்தத்து.

திராவிடகழகங்களே ஊழலை வித்திட்டன தமிழ்நாட்டில். காமராஜரை தோற்கடித்த பாவத்திற்கு தமிழனும் தமிழ்நாடும் அனுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு ஆன பின்னால, ஏன் முகவை மட்டும் ஆட்டுகிறீர்கள்?. ஜெ சொல்லாததா, மரம்... சொல்லாததா? ஏன் விஜயகாந்த் சொல்லாததா,காங்கிரஸ் சொல்லாததா? எல்லோரும் ஒரே குட்டையில் அழுகிய மட்டைகள். இதில் எநத மட்டை நல்ல மட்டையின்னு சொல்றது?

  Displaying 1 - 25 of 66
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 22 Feb, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook