• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்! இ.மா.ராமகிருஷ்ணன், இசையனூர்.  அப்துல் கலாம் போட்டியில் இறங்கி இருந்தால், ஜனாதிபதி தேர்தல் களம் எப்படி இருந்திருக்கும்? காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதால் அப்போதும் பிரணாப் முகர்ஜிக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், சிக்கல் கருணா நிதிக்குத்தான். 'ஒரு தமிழர் குடியரசுத் தலைவர் ஆவதைத் தடுக்கப் பார்க்கிறார்’ என்று சொல்லி இருப்பார்கள். ஒரு தமிழர் பிரதமர் ஆவதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டுடன் இதுவும் சேர்ந்து இருக்கும்! ர.ஷண்முகப்ரியா, திருப்பூர். கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, நித்திக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கும்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா மௌனமாக இருப்பது ஏன்? நித்தி மீதான கிரிமினல் வழக்குகள் கர்நாட காவில்தான் உள்ளன. தமிழகத்தில் இல்லை. இங்கு இப்போதுதான் சிலர் புகார்களைக் கொடுத் துள்ளார்கள். ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தால், வழவழா கொழகொழா பிசினஸே இருக்காது. இப்போதைக்கு, சாந்தமாக இந்த நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள்!  ஆர்.அஜிதா, கம்பம். கருணாநிதி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 71

காவியை கட்டிக் கொண்டு கட்டிலை நாடும் எவரும் இந்துக் களின் நம்பிக்கையில், மதிப்பில் அயலர் மத்தியில் தலைகுனிவை உன்டாக்குவபவர்களே...
வெளிநாட்டில் பணிபுரியும் எங்களைப் போன்றேரின் தலை குனிவிற்க்கு எவர் பதில் கூற முடியும்???

தூய்மையான அரசியலில் நுழைந்து பிரகாசிக்க வேண்டுமானால் யாரை முன்னுதாரனமாக கொள்ள கூடாதென்று நோக்கினால், அதில் முதல் இடத்தில் இருப்பது கருணாநிதியே..

சங்மாவின் மன தைரியத்திற்கு பாராட்டுக்கள்..

ரப்பர் ஸ்டாம்ப், தலையாட்டிப் பொம்மை என்று சொல்லுவதெல்லாம் அந்த காலம்... இற்றைய சூழலில் பாதுகை என்றே சொல்ல வேண்டும்..

தமிழன் பிரதமராவதை தடுத்தார் என்று சொல்பவர்கள் யார்? தமிழர்கள் பலர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களால் தமிழகத்துக்கு என்ன பயன். ப.சி அவர்கள் தமிழர் என்ற வகையில் தமிழக்த்துக்கு என்ன செய்தார்?

நிச்சயமாக நித்தி செய்தது அவரின் தனிப்பட்ட விஷயம். ஆர்த்தி ராவ் என்ற ஒரு காமெடி பீஸ் 40 முறை தவறாக நடந்தார் என்கிறது. 40 முறை தவறாக நடக்கும் வரை இவர் என்ன செய்து கொண்டிருந்தார். அதுவும் கடைசியாக தவறாக நடந்தது 2 ஆண்டுகளுக்கு முன். பணம் பறிக்க யாரோ சொல்லித்தான் இப்படிச் செய்கிறார் என்று தெரிகிறது.

கருணாநிதி சிக்குவது சர்சைகளில் மட்டுமல்ல, பல ஊழல் காரியங்களிலும் தான்......... எப்படியோ டில்லியில் இருப்பவர்களை அனுசரித்து தப்பித்து கொண்டு வருகிறார்...

ஜெயாவிற்கு தேர்தல் நிதியாக ஏகப்பட்டது கொடுக்கப்பட்டதாகவும், இப்பொழுதும் கூட கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டதாகவும், அதனால் எந்தவொரு ஆபத்தும் தமிழகத்தில் கிடையாது என்று நித்தி கும்பல் மதுரை மாநகர் பேசி கொண்டு திரிகிறார்களாமே... ஜெயா தரும் ஆதரவை வைத்து பார்த்தால் நித்தி கும்பல் சொல்லுவது கூட உண்மையாக இருக்குமோ என்றே தோண்றுகிறது...

கலாம் போட்டியில் இறங்கியிருந்தால், நிச்சயம் கலகம் பிறந்திருக்காது...

எம்.ஜி.ஆருக்குத் திரையுலக நடிப்பும் பிரகாசம் கொடுத்தன. - ஸாரி... எம்ஜிஆர்... நல்ல மனிதராகவும் இருந்தார். வாடிய நெஞ்சகளூக்காக நிஜமாகவே வருந்தினார் - கொடுத்து சிவந்த கை பட்டம் சும்மா வாராது.. - ராம் மஸ்கட்

லஞ்சமில்லாத அரசு துறை??? மயாணத்தையும் சொல்ல முடியாது.. என்னவொரு இழிவான நிலை???

மோடி ஒரு இரும்பு தூணென்றால், அத்வானி ஒரு மன் குதிரை, கேசுபாயோ பாதி அழிந்த செல்லாக்காசு...

விஜயகாந்தை காங்கிரஸும், திமுகவும் தொங்கி தொங்கி எப்படியும் கூட்டனிக்குள் கொண்டு வந்து விடும்... உச்சத்தில் இருந்து கொண்டு விஜயகாந்த் எப்படியும் பாதி தொகுதிகளுக்கு அடிப்போட்டு கடைசியில் மூண்றில் ஒரு பங்கில் போட்டியிடுவார்... அப்புறமென்ன, திமுக எனும் கட்சியே தமிழக காங்கிரஸை போல் காணாமல் போய் விடும்...

நித்தியின் முடிவுரையை அமெரிக்க நீதிமன்றம் எழுத ஆரம்பித்து விட்டது.. அடுத்து இந்திய நீதிமன்றம் அதை செயல்படுத்த ஆரம்பித்து விடும்... சிறைச்சாலை நித்திக்காக காத்திருக்கிறது...

ஐரோப்பிய திமிங்கிலத்தின் பசிக்கு, பாரத மயிலின் உணவினை எடுத்து கொடுக்கும் இத்தாலிய நரி...

நித்தியானந்தாவின் செயல்கள் அவரது தனிப்பட்ட விவகாரம். அதைப் பெரிதுபடுத்தலாமா? ஹிந்து மதமும், யோக கலையும், அப்பாவி பக்தர்களும், மதுரை ஆதினமும் தனிப்பட்ட விவகாரமா?????

அரசியலில் நுழைந்து பிரகாசிக்க வேண்டுமானால் யாரை ரோல் மாடலாகக் கொள்ளலாம்? என்ற கேள்விக்கு ஏன் ஜெ. வை விட்டுவிட்டீர்கள்...?

ராகினி, கோபிகா எங்கே? பிரேமானந்தா மாதிரி ஆகப்போகிறது ! பிடதியில் தோண்டி தேடச்சொல்லுங்கள்.

"மனநிம்மதிக்காக வந்தவர்களை 'அடைந்தது’ அவரது தனிப்பட்ட விவகாரமா அல்லது ஊரை ஏமாற்றும் செயலா?"-----------> விருப்பத்துடன் மனம் ஒப்பி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைவது எப்படி ஊரை ஏமாற்றும் செயலாகும்? துறவி என்ற பெயருக்கு இழுக்கு என்றுமட்டும்தான் குறை சொல்ல முடியும். பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்கள் ஆண்கள் எத்தனை பேர் நித்தி அத்துமீறல் செய்தார் என்று புகார் கொடுத்தார்களா? எந்த சட்டப்[ பிரிவின் கீழ் அவர் தவறிழைத்தார் என்று விளக்க முடியுமா? அரசியல்வாதிகள், துணை, இணை தொட்டு, தொடுப்பு, தெரிந்தது, தெரியாதது என்று பல கீழ்த்தரமாகசெயல்களில் ஈடுபடும்போது அதை ராஜதந்திரம் என்று பாராட்டும் மீடியா, மைனாரிட்டிகளை கண்டிக்காத மீடியா இங்கு மட்டும் குதிப்பது ஏனோ? (குறிப்பு: நான் நித்தியை ஆதரிக்கவில்லை)

"கருணாநிதி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும் உடனே வெளியே வந்து விடுகிறாரே" - அவர்தான் சிக்கினாலும் அந்தர்பல்டி அடிச்சுடுறாரே, அப்புறமென்ன?

1980 பாராளூமன்றதேர்தலில் தமிழ்னாட்டில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் அதிமுகவுக்கு 2 தொகுதிகள்தான் கிடைத்தன. திமுக 18 தொகுதிகளில் வென்றது எம்.ஜி.ஆர் மண்ணைக்கவ்வினார். ஒரு தடவை அதிமுக பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியவில்லை. மயிலாடுதுறை, உப்பிலியாபுரம் அண்ணா நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 2 இல் திமுகவும் உப்பிலியாபுரத்தில் மட்டும் அதிமுகவும் வென்றன. அப்போது எம்.ஜி.ஆர் தான் ஆண்டார். தேர்தல் தோல்வியால் முதல்வராக இருந்த எம்.ஜி. ஆர் ஊட்டியில் போய் பதுங்கி கொன்டார். இன்றய க்ருணானிதி யை நான் ஆதரிகக்வில்லை அன்று விடாமுயற்சியுள்ள அரசியல் தலைவராக இருந்தார்.

பெரியார், ராஜாஜி, காமராஜ், ஜீவா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். அனைவரும் அவர்களின் தனி திறமைகளினால் அரசியலில் ஒளிர்ந்தார்கள். ஆனால் இப்போதிருப்பவர் எந்த தனி திறமையினால் சிறந்து இப்பதவியில் இருக்கிறார்.

கழுகார் ஏன் ஜனாதிபதி என எடுத்துகொண்டார் என்று தெரியவில்லை... கேள்வி கேட்டவர் பிரதமரைக்கூட கேட்டிருக்கலாம்...

கே.ராமசுப்ரமணியன் அவர்களே! கொடுத்து சிவந்தது என்று யாரும் பட்டமளிக்கவில்லை!! அந்தக் காலத்தில் தி.மு.க தன் கட்சியின் பிரசார பாடல்களில், நாகூர் இ.எம் ஹனிபா அவர்கள் பாடிய ஒரு பாடலின் ஆரம்ப வரிகளில் வரும் சொல் அது! அதுவே பலகாலங்களில் பட்டித்தொட்டிகளிள் லவ்டு ஸ்பீக்கரில் காது கிழிய ஒலிபரப்பப் பட்டு, காதுவழியே சென்று வாய்கள் முனுமுனுக்க கொஞ்சம் கொஞ்சமாக மனதில் பதிய வைகப் பட்டது! பிறகு ஒரு சமயத்தில் கொடுத்து சிவந்தக் கரம் என்று பாடிய அதே குரல்; அதே நபரைப் பற்றி, "வளர்த்தக் கடா மர்பில் பாய்ந்தது" என்று பாடியதே தெரியுமா உங்களுக்கு? பாவம் எத்தனையோ அப்பாவிகளில் நீங்களும் ஒருவர்!!!!

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சார்ந்துள்ளது நமது இந்திய பொருளாதாரம்....ஆகவே நமது பங்காக இந்த தொகையை கொடுத்து அவர்களது சரிவை தடுக்க முட்டு கொடுக்கும் முயற்சியே இது. ஆகவே இது நம்மை காப்பற்றிக்கொள்ள எடுக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.

  Displaying 1 - 25 of 62
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 11 Jul, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook