'தானே' துயர் துடைத்தோம்!'தானே’ தாக்குதலில் தமிழகத் தமிழனுக்கு மட்டுமல்ல... ஈழத் தமிழனுக்கும் பாதிப்புகள் அதிகம். நம்பி வந்த நாட்டில் அவர்கள் வெம்பிக் கிடந்தார்கள். சொந்த சோகத்தை வெளியே சொல்லவும் சக்தி இழந்து நிற்கும் மனிதர்களாக, கடலூர் முகாமில் இருந்த அவர்களின் உயிரை மட்டும் விட்டு வைத்து, உடைமைகள் அத்தனை யையும் அள்ளிச் சென்றுவிட்டது புயல். 'தானே’ தாக்கிய எல்லைப் பகுதியில் இரண்டு முகாம்கள் இருக்கின்றன. ஒன்று அம்பலவாணன் பேட்டை. இன்னொன்று குறிஞ்சிப்பாடி. இந்த இடங்களில் இருந்த அவர்களின் பத்துக்குப் பத்து சதுரஅடி குடிசைக்குச் சென்றால் மேற்கூரை தலை தட்டும். கீழே வெறும் செம்மண் தரைதான். கடந்த 20 ஆண்டுகளாக மண் தரையில்தான் கண்ணீருடன் காலம் கடத்தி வந்தார்கள் நம் சகோதர, சகோதரிகள். சிறு மழைக்கே சின்னாபின்னமாகிவிடும் இந்தக் குடிசைகளை, இருந்த சுவடு தெரியாமல் பிய்த்து எறிந்து விட்டது 'தானே’ புயல். மானம் காத்த குடிசைகளும், சேகரித்து வைத்த பொருட்களும் மொத்தமாகப் பறிபோக.... . .
COMMENT(S): 3
விகடனுக்கு தமிழக மக்களின் சார்பாக எனது பாராட்டுக்கள்.
நம்மை நம்பி வந்தவர்களுக்கு முதல் உதவி... தமிழனின் பண்பை பிரதிபலித்த விகடனுக்கு நன்றி... தொடரட்டும் தொண்டு...
என் ஆயிரம் ரூபாய் இப்படி பயன்பட்டது மிக்க மகிழ்ச்சி.