• காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு
  • பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
  • குருநாத் மெய்யப்பன் சார்பாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விண்டூ தாரா சிங் தகவல்
  • மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து
  • என்.எல்.சி நிறுவன பங்குகளை விற்க வைகோ எதிர்ப்பு
  • கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ரவுப் நீக்கம்
  • மத்திய அமைச்சர், காங்கிரஸ் எம்.பி.க்கு பிடிவாரண்ட்
  • வருகிறது அ.தி.மு.க. நேர்காணல் - ஹிட் லிஸ்டில் ஐந்து அமைச்சர்கள்
25 May, 2013
''சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டேன்!''
''சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டேன்!'' குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசியக் கட்சிகள் இன்னமும் குழம்பிய நிலையில் இருக்கும்போது, ஆதரவு வேட்டையைத் தொடங்கி விட்டார் பி.ஏ.சங்மா. திடீர் வேட்பாளராகக் களத்தில் குதித்துப் பரபரப்பாக இயங்கி வரும் சங்மாவை டெல்லியில் சந்தித்தோம்.  ''உங்கள் பெயரை நீங்களே முன்​மொழிந்து​​கொண்டீர்கள். மேலும், ஒரு குறிப்​பிட்ட இனத்தின் சார்பாகவும் போட்டி இடுகிறீர்கள். இது சரிதானா?'' ''மே 9-ம் தேதி, பழங்குடிஇனப் பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வரும் ஜனாதிபதி தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க அனைத்து அரசியல் கட்சியினரிடமும் வலியுறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஏனென்றால், கடந்த 60 வருடக் குடியாட்சியில் எங்களைத் தவிர அனைத்து வகுப்பு மக்களின் பிரதிநிதிகளும் இந்தப் பதவியை வகித்து விட்டனர். அதனால், எங்கள் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எழுதினோம். இதில், தமிழக முதல்வர் மேடம் ஜெயலலிதாவும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் எங்கள் வேண்டுகோளுக்கு உடனடியாக மதிப்புக். . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

COMMENT(S): 26

ஜெயலலிதாவும் , நவீன் பட் நாயக்கும் சேர்ந்து நல்லாத்தான் உசுப்பி விட்டுட்டாங்க இந்த சங்மாவை ! விட்டால் இவர் ராஹுல், பிரியன்கா ஏன் வதேரா , கோட்ராச்சி காலில் கூட விழுந்து மன்னிப்புக் கேட்பார் போலிருக்கிறதே!

முதல்ல பாஸ்போர்ட்டை கிழித்துப் போடுங்கள் ஐயா! பிறகு வெற்றி உங்களுக்குத்தான்.

திரு சங்மா அவர்கள் ஜனாதிபதியாவதற்கு முழு தகுதியும் உடையவரே... தகுதியுடையவர்களுக்கு சோனியாவின் ஜோக்கர் சபையில் இடமிருக்காதே...

"''ஜனாதிபதி வேட்பாளரான நீங்கள், இந்த நாட்டு மக்களுக்கு என்ன மாதிரியான வாக்குறுதி கொடுக்கிறீர்கள்?'' மேடம் ஜெயலலிதா சொல்றது கேட்டு ஒழுங்கா நடந்துப்பேன்..

சோனியா மீதான இவரின் குற்றச்சாட்டு இப்போதும் இருக்கிறது. அப்புறம் எதற்கு இவர் மன்னிப்பு கேட்கனும்? என்னமோ சோனியாவுக்கு ஆசையே இல்லைங்கிற மாதிரி பேசறதை ஏற்க முடியாது. 2004 தேர்தலுக்கு பின் சோனியா ஆதரவு எம்பிக்களின் பட்டியலோடு கலாமை சந்திக்க சென்றதை மறுக்க முடியுமா? சுவாமியின் அறிவுரை பேரில் கலாம் அவரை பிரதமராக்க மறுத்ததால் சோனியா பதவியை ஏற்கலை.

கடவுள் கிருபையால் எந்தக் குற்றச்சாட்டும் இல்லையா..? கடவுளே, நான் எந்தக் குற்றமும் செய்ததில்லை.. அதனால் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று சொல்லவில்லையே..!! குற்றச்சாட்டு இல்லாமைக்குக் கடவுள் கிருபைதான் காரணமா..????!!!

சீர் திருத்தங்களுக்கு வழி காட்டுவேன் என்று இவர் கொஞ்ச நஞ்சம் இருக்கக் கூடிய சான்ஸையும் நழுவ விடப் போகிறார்!!!!!

சரோஜ் கண்பத் அவர்களே! இவரை வைத்து காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே? பிரதம மந்திரியின் வாக்குறுதிகளே காற்றில் பறக்கும் போது, ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுபவரின் வாக்குறுதிகள் தேவையா?

சங்க்மா அவர்களே, ஒங்கள வெச்சு காமெடி பன்றாங்களா சார்?

அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவர், அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிட முடியாது. அப்புறம் எதற்கு குடியரசுத் தலைவர் பதவி????

சோனியா காங்கிரஸ் இந்தியதுவத்தை இழந்து விட்டது. இன்னும் காங்கிரஸை ஆளவிட்டால் ஒரு நாள் திருப்பதிக்கு பூஜாரியாக ஒரு பாதிரியார் நியமிக்கப்படுவார். சோனியா இந்தியாவின் மருமகள். அத்ர்க்காக இந்தியாவை ஆளமுடியுமா ?. இந்தியாவில் பிறந்து, இந்திய வாழ்க்கை முறையை அனுபவித்திருக்க வேண்டும். கவுன் போட்டு, சர்ச் சென்று வாழ்ந்து விட்டு, ஒரு இந்தியனை கல்யாணம் செய்தால் இந்தியன் ஆக முடியது. புத்தி கெட்ட இந்தியர்கள்.

Sangma Ji , why you should oppose on 2004? y u ask sorry to her on 2009?

ஒரு பருப்பும்க் வேகாது

He is a good choice

ஓர் உயர்ந்த பதவியைப் பெறும் நோக்கில், தனது சோனியா எதிர்ப்புக் கொள்கையைக் கைவிட்டதும் இல்லாமல், அவரிடம் மன்னிப்பும் கேட்டதாகக் கூறும் திரு.சங்மா தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டார். மகனை மாநில சட்டமன்றத்திலும், மகளை பாராளுமன்றத்திலும் இடம்பெறச் செய்த இந்த புண்ணியவான் நாட்டின் முதல் குடிமகன் என்ற பதவிக்கு அருகதை அற்றவர். அதே நேரத்தில், காங்கிரஸ் பிரணாப் முகர்ஜி போன்ற அரசியல்வாதிகளை முன்மொழியுமானால், இந்த மனிதர் போட்டியிடுவதில் குற்றம் காணுதல் இயலா!

அம்மான்னு சொல்லி போரடிச்சிடிச்சி... இனிமே 'மேடம் ஜெயலலிதா'ன்னு சொல்லலாமா, இல்ல பேரைச் சொன்னா கோவிச்சிக்குவாங்களா?

"கடவுள் கிருபையால் என் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் இல்லை!" - நான் எந்த குற்றமும் பண்ணவே இல்லைன்னு சொல்ல வேண்டியது தானே அதை விட்டு கடவுள் அது இதுன்னுகிட்டு

"நான் சோனியாவுக்கு பெர்சனல் எதிரி அல்ல" - இவரு குழம்பி போய் பேசறாரு, அண்ணே நீங்க பெர்சனல் எதிரின்னா உங்களை உள்ள தூக்கி வச்சு களி திங்க வச்சுருவாங்க

'எங்களைத் தவிர அனைத்து வகுப்பு மக்களின் பிரதிநிதிகளும் இந்தப் பதவியை வகித்து விட்டனர்."

யாராவது எதனை வகுப்புகள் உள்ளன என்று கூற முடியுமா?

சபாநாயகராக மிகவும் அருமையாக செயல்பட்டவர் சங்க்மா. ஜனாதிபதி ஆக மிகவும் பொருத்தமானவர்.

Good choice.

சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் அவர் எதிலும் இறங்க மாட்டார். எப்படி கூடங்குளத்தில் பல்டி, சமச்சீர்கல்வியில் பல்டி, பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு போராட்டம், ஆனால் மானில அளவிலான பெட்ரோல் வரியை குறைக்க மறுப்புன்னு நிறைய ஹோம் ஒர்க் செய்வார். சசிகலா பல்டியை மற்ந்துவிட்டேன்.

சரியான தேர்வுதான். குட் லக் சங்மா.

Displaying 1 - 23 of 23
Only Subscriber Can Post Comments

ஜூனியர் விகடன்
< 03 Jun, 2012 >

அட்டை படம்

சென்ற இதழ்

அதிகம் படித்தவை

Login or Register

LOGIN

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

REGISTER

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook