திருமதி எஃப்.எம். இந்த வாரம்: ராஜேஷ்வரி கிஷோர், நாகர்கோவில் ''நடுத்தர குடும்பமோ, பணம் படைச்ச குடும்பமோ ஒரு குடும்பத் தலைவியோ அல்லது தலைவனோ மட்டுமே ஃபேமிலி பட்ஜெட்டை நிர்வாகம் செய்ய முயற்சி செஞ்சா, அது தோல்வியிலதான் முடியும். இருவரும் சேர்ந்து ஒருமித்த கருத்தோடு குடும்பச் செலவை கவனிச்சாதான் நாலு காசு சம்பாதிச்சு, எதிர்காலத்துல சீரும் சிறப்புமா இருக்க முடியும்.'' வீட்டு வேலை, அலுவலக வேலை செய்த களைப்பிற்கு இடையேயும் உற்சாகம் குறையாமல் பேசுகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ்வரி கிஷோர். இவர்தான் இந்த வாரத்தின் திருமதி எஃப்.எம். ''நான் இளங்கலை வேதியியல் முடிச்சுட்டு தபால் நிலையத்துல வேலை பார்க்கிறேன். என் கணவர் அரசுப் பள்ளியில தலைமையாசிரியராக இருக்கி றார். எங்களுக்கு இரண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணு ஏழாவதும், இளைய பொண்ணு அஞ்சாவதும் படிக்கிறாங்க. பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சப்ப என் கணவருக்குக் கொஞ்சம் கடன் இருந்துச்சு. அதனால கல்யாணத்தைத் தள்ளி. . .
COMMENT(S): 1
ஏங்க உங்க கணவர் ட்யூஷன்லாம் ஒன்னும் எடுக்கறதில்லையா...?