பிஸினஸ் சமூகம் - நாடார்கள்! குட்டி ஜப்பான் - பிரதமர் நேரு சிவகாசி நகரத்திற்கு இட்ட செல்ல பெயர். இந்த குட்டி ஜப்பான் 1900-ம் ஆண்டு வரை தமிழகத்தின் பல்வேறு சிறு நகரங்களைப் போல சாதாரணமாகவே இருந்தது. ஆனால், 1920-க்குப் பிறகு புயல் வேகத்தில் வளர ஆரம்பித்த இந்த நகரம் இன்றுவரை தன் வேகத்தைக் கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. இந்த புல்லட் வேக வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முக்கியமானவர் அய்ய நாடார். சிவகாசியில் 1905-ல் பிறந்தார் அய்ய நாடார். அப்பா, பழனியப்ப நாடார்; அம்மா, நாகம்மாள். இந்த குடும்பத்தில் முதல் குழந்தை அய்ய நாடார்தான். அன்றைக்கு சிவகாசி நகரம் ஏறக்குறைய ஒரு சிற்றூராகவே இருந்தது. சிறிய அளவில் விவசாயம், பொதிமாட்டு வண்டிகளில் பலசரக்கு ஏற்றிக் கொண்டு ஊர் ஊராகப் போய் விற்கும் வியாபாரம், புகையிலையைக் கருப்பட்டி நீரில் ஊறவைத்து, அதன்பின் காயவைத்து சுவை உண்டாக்குதல், கை இயந்திரத்தால் பஞ்சு அரைத்தல், கமலைத்தோல். . .
COMMENT(S): 1
nice motivational article to every one...