கயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்! திருமணஞ்சேரி என்றதும், கும்பகோணம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள தலம்தான் சட்டென்று நினைவுக்கு வரும். கல்யாண வரம் அருளும் இந்தத் தலத்தைப் போலவே, அதே பெயரில் இன்னொரு தலமும் இருக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி செல்லும் வழியில், சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருமணஞ்சேரி வளைவு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. பயணித்தால், திருமண வரம் தந்தருளும் ஆலயத்தை அடையலாம். ஒருகாலத்தில் கோவில்காடு என்று அழைக்கப்பட்ட இந்த ஊர், பிறகு திருமணஞ்சேரி என்றானதாகச் சொல்கின்றனர். இங்கே... சிவனாரின் திருநாமம் ஸ்ரீசுகந்தபரிமளேஸ்வரர். திருமணநாதர் என்றும் அழைக்கின்றனர், பக்தர்கள். அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபெரியநாயகி அம்பாள். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகர் ஒருவர் மிகுந்த சிவபக்தர். வீடு- வாசலுக்கும், தொழில் லாபத்துக்கும் எந்தக் குறைவும் இல்லாமல் அந்த வணிகர் வாழ்ந்து வந்தார். என்றாலும், அவருக்கு ஒரே ஒரு குறை இருந்து, அவர் மனத்தை வருத்தியெடுத்தது. ஆம்... 'கொஞ்சி விளையாட ஒரு. . .
COMMENT(S):