உயராத உருளை... உயரும் மக்காச்சோளம்! அலசல் தற்போது நிலவும் விலை நிலவரங்களைப் பொறுத்து விளைபொருட்களுக்கு எத்தகைய விலைகள் கிடைக்கும்? இப்போதைய தட்பவெட்ப நிலையில், பயிர்களைத் தாக்கக் கூடிய பூச்சி மற்றும் நோய்கள் எவையெவை... நோய் தடுப்பு முறைகள் என்னென்ன? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத்தான் தற்போது விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையம், கீழ்க்கண்ட தகவல்களைத் தன்னுடைய பரிந்துரையாக முன்வைக்கிறது. உருளைக்கிழங்கை இருப்பு வைக்க வேண்டாம்! தற்போது, நீலகிரி மாவட்டத்தில் நீர் போகத்தில் (பிப்ரவரி மாதம்) விதைப்பு செய்த உருளைக்கிழங்கு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விற்பனை செய்யப்பட்ட விலை ஆய்வு முடிவுகளின்படி, அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிழங்கு, 14 ரூபாய் முதல். . .
COMMENT(S): 1
முன்னெற்றப் பாதைக்கு வழிகாட்டும் பகுதி, அருமை. மேலும் சிறக்க வேண்டும்.