கடைசி மீனும் பிடிபட்ட பிறகு... அனைவருக்கும் பசுமை வணக்கம்! 'பசுமைப் பொருளாதாரம்' என்கிற வார்த்தை, இப்போது அடிக்கடி உலக அளவில் உச்சரிக்கப்படுகிறது. இப்போதுகூட, பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் இதே வார்த்தையை உச்சரித்தபடி, 'எர்த் சம்மிட்-2012' என்கிற பெயரில், உலக நாடுகளின் மாநாடு நடந்திருக்கிறது. 'ரியோ ப்ளஸ்-20' என்றும் இந்த மாநாட்டுக்கு அழகாக ஒரு பெயரையும் சூட்டியுள்ளனர். 1992-ம் ஆண்டில் முதன்முதலாக ஐ.நா. சார்பில் 'சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி' மாநாடு நடத்தப்பட்டு, 20 ஆண்டுகள் ஆவதன் நினைவாகத்தான் இப்படியரு பெயர்! கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், 'இந்த 20 ஆண்டுகளில் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற எதையெல்லாம் சாதித்திருக்கின்றன இந்த நாடுகள்?' என்று கேட்டால்... 'ஒரு சதவிகித முன்னேற்றம்கூட இல்லை' என்பதுதான் பதிலாக இருக்கும்! அதேசமயம், 'சுற்றுச்சூழல் கேடுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளன?' என்று கணக்குப் போட்டால்... '1,000 மடங்குக்கு மேல்' என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம். ஆம், அந்த அளவுக்கு இந்த. . .
COMMENT(S): 2
உலக அரசுகளின் எந்த அறிவிப்புகளும் சந்தோஷம் தருவதாக இல்லை. வருத்தம் தான்..
We are not respecting mother nature....atleast now we have to do this.