தெற்கே ஆடி... வடக்கே கரீப்! பட்டம் 'விதை விதைக்க, தலைப்பாகை கட்டி முடிக்கும் நேரம்கூட ஒருவர் காத்திருக்கக் கூடாது’ -நம்மூர் 'ஆடிப் பட்டம் தேடி விதை'க்கு இணையான உத்தர பிரதேச மாநில பழமொழி இது. ஆம், இங்கே வார்த்தைக்கு வார்த்தை இந்தப் பழமொழியைத்தான் உச்சரிக்கிறார்கள். அந்த அளவுக்கு விதைப்பு மீது அவர்களுக்கு அக்கறை! இந்தப் பழமொழிக்குப் பின்னால் சுவராஸ்யமான கதையையும் சொல்கிறார்கள் இந்த மக்கள். அது, வடஇந்தியாவில் விதைப்புக் காலம். அதிகாலையில் விதைப்பதற்காக இரண்டு விவசாயிகள் வயல்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஒருவரின் தலைப்பாகை அவிழ்ந்து விட, 'நீ முன்னே செல், நான் தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு வந்து விடுகிறேன்’ எனச் சொல்லியபடி சரி செய்யத் தொடங்குகிறார் (அந்த மாநிலத்தில் தலைப்பாகை மிகப் பெரியதாக இருக்கும்). மற்றவரோ... வயலை அடைந்து விதைக்கத் தொடங்கி விட்டார். தலைப்பாகைக்காரர், வந்து சேர்வதற்குள் சரசரவென பெய்த மழை, வயலை நிறைத்து விட்டது. இதனால் ஒருவர் விதைத்தும்,. . .
இந்தியாவில் மனிதர்களுக்கான மருந்து வகைகளை விற்போர் மருந்தியலில் பட்டயப் படிப்பு படித்து, அதன்பின் அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் விவசாய மருந்துகளை விற்பனை செய்ய எவ்வித தகுதியும் தேவையில்லை. இந்த முரண்பாடான சட்ட திட்டங்களே, வேளாண்மையில் வேதி இடுபொருட்களின் உபயோகம் முறையற்றும், அதீத அளவில் இருப்பதற்கும் காரணம். மாநில மற்றும் நடுவண் அரசுகள் சிந்திக்குமா?
COMMENT(S): 1
இந்தியாவில் மனிதர்களுக்கான மருந்து வகைகளை விற்போர் மருந்தியலில் பட்டயப் படிப்பு படித்து, அதன்பின் அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் விவசாய மருந்துகளை விற்பனை செய்ய எவ்வித தகுதியும் தேவையில்லை. இந்த முரண்பாடான சட்ட திட்டங்களே, வேளாண்மையில் வேதி இடுபொருட்களின் உபயோகம் முறையற்றும், அதீத அளவில் இருப்பதற்கும் காரணம். மாநில மற்றும் நடுவண் அரசுகள் சிந்திக்குமா?