நிரந்தரத் தீர்வு எப்போது ?அனைவருக்கும் பசுமை வணக்கம்! 'இந்தியா, விவசாய நாடு... விவசாயிகள்தான் இந்நாட்டின் முதுகெலும்பு' என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உரக்கச் சொல்வதை, ஒரு தந்திரமாகவே கையாண்டு வருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். ஆனால், உலகில் வேறு எங்குமே நடக்காத அளவுக்கு... இங்கேதான் விவசாயத் தற்கொலைகள் நடந்தேறி வருகின்றன என்பதை வசதியாக மறந்தும், மறைத்தும் வருகிறார்கள். கடந்த ஆண்டில் நடந்துவிட்ட விவசாயத் தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்கள், தற்போது வெளியாகியிருக்கின்றன. இம்முறையும் மகாராஷ்டிரா மாநிலம்தான் வேதனையுடன் முதலில் நிற்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. பட்டியலில் தமிழ்நாட்டுக்கும் இடம் இருக்கவே செய்கிறது! 'விவசாயத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துவோம்' என்றபடி, மன்மோகன் சிங் அரசு, பெரிய அளவில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது. அதை வைத்து, அரசியல் ஆதாயம் அவர்களுக்கு எவ்வளவு கிடைத்ததோ... ஆனால், விவசாயிகளுக்கு கதிமோட்சம் கிடைக்கவில்லை. அண்மையில் நடிகர் அமிதாப் பச்சன், விதர்பா விவசாயிகள் 114. . .
COMMENT(S): 1
நிரந்திரத் தீர்வு என்பது இந்தியாவில் என்றுமே கிடைக்காது. இருக்கும் சிக்கல்களை இடியாப்பச் சிக்கல்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் செயல்.