நாட்டுக்கோழிகளே வருக! அனைவருக்கும் பசுமை வணக்கம்! 'நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், 16 மாவட்டங்களில் பண்ணைகள் அமைத்து, தகுந்த விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து வழங்கப்படும்’ -இப்படி அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர். நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து... இயற்கை ஆர்வலர்கள், விஷயமறிந்த கால்நடைத்துறை வல்லுநர்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்த அறிவிப்பு... வரவேற்கத் தக்கதே! 'கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும்' என்கிற நோக்கில், முதலமைச்சர் இதை அறிவித்துள்ளார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், அனுபவ விவசாயிகளும்... பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து நீண்டகாலமாகவே சொல்லிவரும் கருத்துக்களை சீர்தூக்கி பார்த்துதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்பது கேள்விக்குறியே! ''நாட்டுக்கோழி என்பதே, வீட்டைச் சுற்றியும்... தோட்டத்தைச் சுற்றியும் திரிந்து, பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள் மற்றும் புழு-பூச்சிகளை உண்டு வாழ்பவை. இயற்கை விவசாயத்தில் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கருவிகளாகவே செயல்படுபவை. இவற்றைப் பண்ணைகளில் நூற்றுக்கணக்கில் அடைத்து வளர்த்தால், பிராய்லர் கோழிகள் போலவே... இவற்றுக்கும். . .
உண்மைதான். நாட்டுக் கோழி என்ற பெயரில் நாட்டுக் கோழிகளின் நிறத்துடன் பிராஇலர் கோழிகள் அதிகமாக வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். நாட்டுக் கோழிகளை பண்ணையில் அடைத்து வளர்க்க முடியாது. மேலும் ஹோட்டல்களில் கிடைக்கும் நாட்டுக் கோழிகள் இவையே. மக்கள் அதிக பணத்தைக் கொடுத்து நிறம் மாற்றப் பட்ட பிராய்லர் கோழிகளையே வாங்குகிறார்கள்.
COMMENT(S): 1
உண்மைதான். நாட்டுக் கோழி என்ற பெயரில் நாட்டுக் கோழிகளின் நிறத்துடன் பிராஇலர் கோழிகள் அதிகமாக வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். நாட்டுக் கோழிகளை பண்ணையில் அடைத்து வளர்க்க முடியாது. மேலும் ஹோட்டல்களில் கிடைக்கும் நாட்டுக் கோழிகள் இவையே. மக்கள் அதிக பணத்தைக் கொடுத்து நிறம் மாற்றப் பட்ட பிராய்லர் கோழிகளையே வாங்குகிறார்கள்.