முன்னறிவிப்பு ! முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் பகுதி தற்பொழுது, நிலவக்கூடிய தட்ப வெட்பநிலையில், செப்டம்பர் மாதத்தில் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள்; அவற்றுக்கான தடுப்பு முறைகள் குறித்து, சில தகவல்களை வெளியிட்டுள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும், பயிர் பாதுகாப்பு மையம். பூச்சி, நோய்கள் உஷார்... உஷார்...! நெல்லுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்! மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு, தண்டுத்துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதலும்; திருவள்ளூர் மாவட்டத்தில் இலைப்பேன் தாக்குதலும் காணப்படுகிறது. வயலில் விளக்குப்பொறி வைப்பதன் மூலமும், 5% வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிப்பதன் மூலமும் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். காய்ப்புழுவுக்குக் கவர்ச்சிப்பொறி ! திருநெல்வேலி மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் காய்ப்புழுவின் தாக்குதல்கள் காணப்படுகின்றன. இனக்கவர்ச்சிப் பொறி அமைத்தும், தாவரப் பூச்சிக்கொல்லி தெளித்தும் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இலைச்சுருட்டுப் புழுவுக்கு விளக்குப்பொறி ! திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில், இலைச்சுருட்டுப் புழுவின். . .
அந்தக்கால "வயலும் வாழ்வும்" இனிக்கும் இரவு நினைவுக்கு வருகிறது. வயல் இருக்கோ நாம் விவசாயிகளோ இல்லையெனினும் அமைதியான அந்த நேரத்தில் திருச்சி வனொலியின் அந்த நிகழ்ச்சியைகேட்டு கிராம உணர்வு பொங்க மகிழ்ந்தது இன்றும் இனிக்கிறது.
COMMENT(S): 2
அந்தக்கால "வயலும் வாழ்வும்" இனிக்கும் இரவு நினைவுக்கு வருகிறது. வயல் இருக்கோ நாம் விவசாயிகளோ இல்லையெனினும் அமைதியான அந்த நேரத்தில் திருச்சி வனொலியின் அந்த நிகழ்ச்சியைகேட்டு கிராம உணர்வு பொங்க மகிழ்ந்தது இன்றும் இனிக்கிறது.
ஆல் இண்டியோ ரேடியோவின் உழவர்களுக்கான செய்திகளைக் கேட்கும் உணர்வு வருகிறது.