மண்புழு மன்னாரு !
மண்புழு மன்னாரு ! வீட்டுக்கு வீடு கைத் தெளிப்பானோ... விசைத் தெளிப்பானோ இருக்கற காலமிது. வழக்கமா வயல்ல, பூச்சிக்கொல்லி/பூச்சிவிரட்டி தெளிச்சவுடனே, தெளிப்பானை மூலையில் போட்டு வெச்சுடுவோம். தெளிப்பான்ல மிச்சமீதி தங்கியிருக்கற திரவப்பொருளால... துரு ஏறி சீக்கிரமே டேங்க் பழுதாகிடும். அதனால வேலை முடிஞ்சதும், தெளிப்பானை, சுத்தமா துடைச்சு வெச்சுடுங்கோ! மரத்தைப் பயிர் பண்றது, இப்ப ரொம்ப வேகமாகப் பரவிக்கிட்டு இருக்கு. ஆனா, அதுக்காக குழி எடுக்கறதுக்கு ஆள் கிடைக்கறதுதான்... குதிரைக் கொம்பா இருக்கு. குழி தோண்டறதுக்குனே 'ஆக்கர்’னு ஒரு கருவி இருக்கு. இதை டிராக்டர்ல பொருத்தி, குழி தோண்டலாம். சின்ன ரக 'ஆக்கர்’ கருவியும் இருக்கு. பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய இந்தக் கருவியை, கையால் பிடிச்சுக்கிட்டே குழி தோண்டலாம்! 'மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தறதுக்கு ஒட்டுண்ணி கட்டுங்க'னு வேளாண் பல்கலைக்கழகத்துல சொல்றாங்க. நம்ம விவசாயிங்களும், ஒட்டுண்ணி அட்டையை, வாங்கி வாங்கி வயல்ல கட்டிவிடறாங்க. அதேசமயத்துல, பலபேரு ரசாயன மருந்தையும் அடிச்சிவிடுறதுதான் கொடுமை. இப்படி செய்றதால.... . .
இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்யவும்
For New users
CLICK HERE to REGISTER FREE
COMMENT(S): 5
ஆக்கர் கருவியைப் பற்றி அது எங்கு கிடைக்கும், விலை என்ன போன்ற தகவல்களைக் கொடுத்திருக்கலாமே.
இளநீரை வெட்டும் போது அதில் நார், தூசு ஆகியவை அதில் சேராதா? வடிகட்டி எடுத்ததை குளுகோஸாகப் பயன்படுத்த முடியுமா!
இள நீரின் மருத்துவப் பயன் பாடு புதிது..
சித்திரை மாசத்து உழவை பத்தரை மாத்து தங்கத்தை வைகாசி வரை நீட்டி கொடை உழவுக்கு சொன்ன ஆலோசனை நல்லா இருக்கு..