ஊடுபயிரில் அசத்தும் அன்னாசி ! ''எந்தப் பயிராக இருந்தாலும் சரி... அதற்கேற்ற ஊடுபயிரையும் சேர்த்து நடவு செய்தால், கூடுதல் வருமானத்தோடு பிரதான பயிருக்கும் சில நன்மைகள் கிடைத்துவிடும். இதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட விவசாயிகள், ஊடுபயிர் சாகுபடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான பயிராக இருக்கும் ரப்பர் மரங்களுக்கு நடுவே... அமோகமாக அன்னாசி பயிரிடப்படுகிறது! ஒரு காலத்தில் வேலிப்பயிர் என்றே அறியப்பட்டு வந்த அன்னாசியை, இப்போது தனிப்பயிராகவே பலரும் சாகுபடி செய்து வருகிறார்கள். சத்தான சந்தைத் தேவை இருப்பதை விவசாயிகள் உணர்ந்ததுதான் இதற்குக் காரணம்! மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில், மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கிறது காஞ்சிரக்கோடு. காணும் இடமெல்லாம் ரப்பர் சாகுபடிதான். இங்கே தன்னுடைய தோட்டத்தில் 'ரப்பர் பால்’ சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேஸ் ராணியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள... உற்சாகமாய் பேசத் துவங்கினார். ''ஆரம்பத்துல இருந்தே இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன். 'குமரி. . .
'பசங்களோட படிப்புச் செலவுக்காக கொஞ்ச பூமியை வித்துட்டோம்'.....'அசத்தலான வருமானம் கிடைக்குது'. இந்த இரண்டு கருத்துகளும் எதிர்மறையாக உள்ளதே. மன்னிக்கவும். விவசாயம் போதிய வருமானம் தருவதில்லையா?
ஒரு வருடம் உழைத்து விளைவிப்பவனுக்கு ஒரு பழத்துக்கு 10 ரூபாய், ஆனால் அதன் சந்தை விலை 20 - 25 ரூபாயா? கலைஞரின் உழவர் சந்தை மகத்தான திட்டம். ஆனாலும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் காசு வாங்கிக் கொண்டு அதை மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
COMMENT(S): 6
1200 கொஞ்சம்தான் என்றாலும் சிறு செலவுகளுக்கு ஆகுமே?. நமக்குத்தான் 1200 கொஞ்சம், இவர் போன்ற சிறு விவசாய மக்களுக்கு அது அதிகமே.
'பசங்களோட படிப்புச் செலவுக்காக கொஞ்ச பூமியை வித்துட்டோம்'.....'அசத்தலான வருமானம் கிடைக்குது'. இந்த இரண்டு கருத்துகளும் எதிர்மறையாக உள்ளதே. மன்னிக்கவும். விவசாயம் போதிய வருமானம் தருவதில்லையா?
இது ஊடு பயிர் என்பதால் சரி. இல்லை யென்றால் மாதம் 1200 ரூபாய் வைத்து என்ன செய்ய முடியும்.
இது ஊடு பயிர் என்பதால் சரி. இல்லை யென்றால் மாதம் 1200 ரூபாய் வைத்து என்ன செய்ய முடியும்.
ஒரு வருடம் உழைத்து விளைவிப்பவனுக்கு ஒரு பழத்துக்கு 10 ரூபாய், ஆனால் அதன் சந்தை விலை 20 - 25 ரூபாயா? கலைஞரின் உழவர் சந்தை மகத்தான திட்டம். ஆனாலும் அதிகாரிகள் வியாபாரிகளிடம் காசு வாங்கிக் கொண்டு அதை மூடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.