செலவு இல்லை... வரவு மட்டுமே... வானம் பார்த்த மானாவாரி பூமிகளைப் பொறுத்தவரை விதைக்கும் பட்டம்... ஆடிப் பட்டம் மட்டுமே! ஏனெனில், அதுதான் (ஜூன்-செப்டம்பர்) குறிப்பிடத்தக்க அளவில் மழை கிடைக்கும் காலம். இந்த மழைநீரைப் பயன்படுத்தி, செய்யப்படும் சாகுபடிகளில் சிறப்பான மகசூல் தருவது... 'சிறுதானியங்கள்' என்று பொதுவாக அழைக்கப்படும் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்களே! இதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தொடர்ந்து, சிறுதானிய சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள பி.எஸ். பாளையம் (புராணசிங்குப் பாளையம்) பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரவிச்சந்திரன் (இவர், 10.11.2011-ம் தேதியிட்ட 'பசுமை விகடன்’ இதழில் வெளியான 'தில்’லான தினை’ செய்தி மூலம் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்). ''எனக்குச் சொந்தமா 25 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, ஏறத்தாழ 10 ஏக்கர் நிலத்துல கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலினு சிறுதானியங்களைத்தான் சாகுபடி செய்றேன். ஓரளவுக்கு தண்ணி வசதி இருந்தாலும்,. . .
COMMENT(S): 1
கிராமத்தில் ஒரு விவசாயி பயிர் செய்தால், அவை பறவைகளுக்கே போதாதே... அவற்றை விரட்டவும் கஷ்டமாக இருக்கும்..