கோடை உழவு... பொன்னேர்...விதை முகூர்த்தம்...ஆடிப் பட்டம் 'ஆடிப் பட்டம் தேடி விதை...’ என்ற பழமொழி, விவசாயிகளின் மத்தியில் பிரபலமான ஒன்று. காரணம்... காலகாலமாக அது அவர்களுக்குத் தவறாமல் கைகொடுத்து வருவதுதான். ஆம், ஆழ்ந்த அனுபவத்துக்குப் பிறகு முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கும் ஒரு சூத்திரமாகவே இந்தப் பழமொழி அவர்களுக்குப் பயன்பட்டு வருகிறது! இந்தப் பட்டத்தில் விதைத்தால்... எதிர்பார்த்தபடி விளைந்து கைகொடுப்பது... கண்கூடு! அந்த வகையில், 'ஆடிப் பட்டம்' கைகொடுக்கும்விதம் பற்றி இங்கே பேசுகிறார்... 'காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க'த்தின் பொதுச் செயலாளர், 'கீழ்வேளூர்’ தனபாலன். ஆடியில் விதைத்தால் தையில் அறுவடை! ''வைகாசி, ஆனி மாதங்களில் கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருக்கும் தமிழகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கும். இந்த மழைநீரானது... கொஞ்சம் கொஞ்சமாக உள் தமிழகத்தை நோக்கி ஓடி வந்து, ஆடி மாதத்தில்தான் ஊரையே நனைக்கும். கூடவே, கொஞ்சம் போல மழையும் எட்டிப் பார்க்கும். இப்படி கிடைக்கும் தண்ணீரை. . .
COMMENT(S):