இணையதளத்தில் உம்பளாச்சேரி! திருத்துறைப்பூண்டி, கொற்கை கிராமத்துல, திருவாரூர் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பா, 'உம்பளாச்சேரி இனக் கன்றுகள் பேரணி’ நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட கலெக்டர் நடராசன், 'மாம்பழத்துக்கு சேலம் மாதிரி... உம்பளச்சேரி மாடுகள் திருவாரூர் மாவட்டத்தோட பொக்கிஷம். இந்த மாடுகள் அதிகமா பால் கறக்கறதுக்கான ஆராய்ச்சிகளைச் செய்யணும். அதோட, இந்தப் பாரம்பரிய ரக மாடுகளோட விந்தணுக்களைச் சேமிச்சுப் பராமரிக்கறதுக்காக மரபணு வங்கி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இந்த ரக மாடுகளை வாங்கறதுக்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்வோம். இந்த மாடுகளை 'வெப்சைட்’ மூலமா உலகளவுல பிரபலப்படுத்த ஏற்பாடு செய்வோம். அதோட 'விலையில்லா மாடுகள்' வழங்குற திட்டத்துல இந்த ரக பசு மாடுகளைக் கொடுக்கறதுக்கும் நடவடிக்கை எடுப்போம்’னு சொல்லியிருக்கார். -ஜி. பிரபு . . .
COMMENT(S): 1
very good plan.....