உரிய இழப்பீடு பெற்றுத் தருவோம்! பிரச்னை விளைந்த கரும்பை உரிய நேரத்தில் வெட்டாமல், காலம் தாழ்த்தி வருவது தமிழகம் முழுக்க தொடர்கதையாகவே மாறிவிட்டது. இதனால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை ஊருக்கும்... அரசாங்கத்துக்கும் உணர்த்தும் வகையில்... நாகப்பட்டினம் மாவட்டம், மாப்படுகை பகுதியைச் சேர்ந்த முருகையன், உயிரை மாய்த்துக் கொண்டார். அதன் பிறகும்கூட அரசாங்கமும்... ஆலை நிர்வாகங்களும் அசைவதாகக் காணோம்! ''பதினாறு மாசம் தாண்டியும், என்னோட ரெண்டு ஏக்கர் நிலத்தில இருக்கற கரும்பை வெட்டல. மூணு மாசம் கூடுதலா ஆகிட்டதால, கரும்பு எடை குறைஞ்சு போச்சு. சர்க்கரை அளவும் குறைஞ்சுடும்கறதால... விலையும் கம்மியாத்தான் கிடைக்கும். வெட்டுக்கூலியோ... அதிகமாயிடும். ஆகக்கூடி, செலவு பண்ணுன தொகைகூட இந்தத் தடவை கிடைக்காது. பேங்குல வாங்குன கடனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல'' என்று பொங்கி மாய்கிறார் தூத்துக்குடி மாவட்ட, எம்.பி. சர்க்கரை ஆலைக்காக (தனியார்) கரும்பு பயிரிட்டிருக்கும் தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயஜோதி. ''போன வருஷம் 250 டன். . .
COMMENT(S): 1
கலெச்டர் சொல்வதை நபாதிர்கள்