உலகம் சுற்றும் உழவன்...ஜன்னல் அமெரிக்க விவசாயிகள் மத்தியில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம், அந்த நாட்டில் நடைமுறையில் இருக்கும் 'பண்ணைச் சட்டம்' பற்றித்தான். அமெரிக்கா, 1933-ம் ஆண்டில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையில் சிக்கித் தவித்தபோது, விவசாயிகளைக் காக்க வேண்டி, அப்போதைய அதிபர் 'ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்’ என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் இந்தச் சட்டம். விவசாயிகளுக்கு, விவசாயம் செய்யாமல் இருக்க, மானியம் வழங்குவதுதான் இதன் நோக்கம். 'அதிக விளைச்சல் இருந்தால், விலை வீழ்ச்சி ஏற்பட்டு விடும்’ என்பதால், விவசாயம் செய்யாமல் இருக்க, அந்தக் கால கட்டத்தில் மானியம் வழங்கப்பட்டது. அன்றையச் சூழ்நிலையில், விவசாயிகளை வாழ வைத்த, அதே திட்டம்தான், இன்றைக்கு விவசாயிகளை விவசாயத்தை விட்டே வெளியேற்றி வருகிறது. இந்தச் சட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு, புதிய திட்டம் மற்றும் செலவு மதிப்பீடு உருவாக்கப்படும். வருகிற செப்டம்பர் 30-ம் தேதி, அந்த ஐந்து ஆண்டு கெடு வருகிறது. அதனால்தான் இதைப்பற்றி விவாதித்துக். . .
COMMENT(S):