நான் நம்மாழ்வார் பேசுகிறேன்! ஆற்றில் நீர் வருவதற்கு முன்பாக, ஒரு நல்ல நாள் பார்த்து சிறுவர், பெரியவர், நண்பர், சுற்றம் அனைவரும் கூடி நல்லேர் பூட்டுவார்கள். இளங்காடு, வெண்ணாற்றின் கிளை வாய்க்கால் தென்கரை அருகே இருந்த எங்கள் நிலத்திலும், இப்படி நல்லேர் பூட்டினார்கள்! மாடுகளைக் குளிப்பாட்டி கலப்பை, நுகத்தடிக்கு சந்தனம், குங்குமம் பூசி இருந்தார்கள். புதிய தேங்காய் நார்க்கயிறு கொண்டு ஏர் பூட்டினார்கள். தேர்ச்சி பெற்ற ஐந்து பேர்... ஏர் பின்னால் அதட்டிக் கொண்டே நடந்தார்கள். மாடுகள் வேகமாக நடந்தன. காய்ந்து கிடந்த பூமி கட்டி முட்டியாகப் பெயர்ந்து விழுந்தது. நான்கு, ஐந்து விளா (சுற்று) வந்த பிறகு... ஏர்கள் நின்றன. மேழி (கைப்பிடி) பிடித்திருந்தவர்கள், 'மேழிப்பால் குடிக்கிறவங்கள்லாம் வாங்க' என்று சத்தம் கொடுத்தார்கள். முதல் முறையாக மேழி பிடிப்பவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ''நம்மை, (நம்மாழ்வார் என்பதன் சுருக்கமாம்) இப்படி ஓடி வா'' என்று முன்னேர்க்காரர் கையசைத்துக் கூப்பிட்டார். கட்டி முட்டிகளில் தட்டுத்தடுமாறி,. . .
COMMENT(S): 6
Realities of rural india
நானும் கூட நம்மை தான்
அருமையான தொடர்.
எல்லோரும் இன்புற்றிருக்கச்செய்த நல்லேர். மீண்டும் கிடைக்காத, மிக அற்புதமான தருனங்கள்.
எங்களையும் எங்கள் இளமைக்கால் நினைவுக்கு அழைத்துச் செல்கிறார். ஆற்று நீரின் சல சலப்பு பனை மரங்கள் எல்லாம் மனிதனினாசைக்கு பலியாகிவிட்டன.
ஏக்கமாய் இருக்கிறது....