பந்தல் இல்லாமலே பளபளக்கும் திராட்சை ! பயணம் இன்றைக்கும் இந்திய நாட்டின் பொருளாதாரச் சுக்கான், இயற்கையை நம்பித்தான் இருக்கிறது. பருவமழை தப்பிப் போனால்... பதறித் துடிக்கிறோம். ஆனால், 'நீரின்றி அமையாது உலகு’ என்கிற பதத்தையே தூக்கி எறிந்துவிட்டார்கள் இஸ்ரேலிய விவசாயிகள். நீரில்லாமல், நிலமில்லாமல் அவர்கள் செய்யும் விவசாயத்தைப் பார்த்து அதிசயித்து, நின்ற நமது விவசாயிகளிடம் பேசத் தொடங்கினார்... இஸ்ரேலிய நாட்டின் 75 வயது திராட்சை விவசாயி ஈட்டன். அதற்கு முன்பாக ஒரு குறிப்பைச் சொல்லிவிடுகிறேன். இஸ்ரேல் முழுக்கவே பெரும்பாலும், ரசாயன விவசாயம்தான். இயற்கை விவசாயம் என்பது ஓரிரு இடங்களில் மட்டும் நடந்து வருகிறது. இங்கே, நாம் ரசாயனம் மற்றும் இயற்கைக்கு மிஞ்சியத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயத்தின் மீது அவர்கள் காட்டி வரும் ஆர்வம், அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், விவசாயிகளுக்கு அரசாங்கம் எந்த அளவுக்குப் பக்கபலமாக நிற்கிறது... என்பது போன்ற விஷயங்களின் மீது நம்முடைய கவனத்தைப் பதிப்போம்!. . .
COMMENT(S):