வானம் தொடுவோம்! மிகக் குறுகலான பாலம் அது. சக்தி முனிவர் என்ற மகா பண்டிதர், அதன் மீது நடந்து வந்துகொண்டிருந்தார். ஓர் ஒற்றையடிப் பாதை அளவேதான் அந்தப் பாலம் இருந்தது. பாதி வழி வந்தபோதுதான் தனக்கு நேர் எதிரே மிகவும் அதிகாரம் படைத்த மன்னன் ஒருவன் வந்துகொண்டிருப்பதைக் கண்டார் முனிவர். உடனே, 'பின்னால் திரும்பிப் போ! அப்போதுதான் என்னால் இந்தப் பாலத்தைத் தாண்டிப் போக முடியும்!' என்றார். 'நீங்கள் பின்னால் போங்கள்!'' என்று, பதிலுக்கு உறுமினான் மன்னன். 'நான்தான் பாலத்தின் மீது முதன்முதலாக அடி எடுத்து வைத்தேன்!' என்றார் முனிவர். 'ஆனால், என்னால் உங்களை தள்ளிவிட்டுப் போக முடியும்!' என்றான் மன்னன். 'அது நியாயம் அல்ல. நான் ஓர் ஆசான். சீடர்கள் மிகுந்த ஒரு குரு. இந்த தேசம் மிகவும் மதிக்கும் ஒரு தத்துவ ஞானி. அதனால், முதலில் செல்லும் உரிமை எனக்கே தரப்பட வேண்டும்' என்று வாதாடினார் முனிவர். ஆனால், மன்னனின். . .
COMMENT(S):