ராமன் எத்தனை ராமனடி... தருமமிகு சென்னையில் இருந்து கோயில் நகரமாம் காஞ்சிக்குச் செல்லும் வழியில், தாம்பரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில், பாலாற்றின் கிழக்கே அமைந்துள்ளது செங்கல்பட்டு. ஸ்ரீராமர் கோதண்டபாணியாய் கோயில் கொண்டிருக்கும் திருவிடம் இது. இந்த ஊரின் அருகிலேயே பொன்விளைந்த களத்தூர், பொன்பதர்கூடம் ஆகிய தலங்களும் அமைந்திருப்பது, நாம் செய்த புண்ணியமே! ஆமாம்... செங்கல்பட்டு கோதண்டபாணியைத் தரிசிப்பதுடன், அருகிலேயே அமைந்த இந்தத் தலங்களுக்கும் சென்று... நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களிலும், சதுர்புஜனாகவும், பட்டாபிஷேக மூர்த்தியாகவும் அருளும் ஐந்து ஸ்ரீராம மூர்த்தியரை ஒரே நாளில் தரிசித்துவிடலாம். வரும் ராம நவமி திருநாளில், இந்த ஐந்து ராம ஸ்வாமிகளையும் தரிசிப்பது அவ்வளவு விசேஷம்! வாருங்கள்... இந்த ஐவர் குடிகொண்டிருக்கும் ஆலயங்களையும், அவர்களின் அனுக்கிரஹ சிறப்பையும் அறிந்து மகிழ்வோம். செங்கல்பட்டு ஸ்ரீகோதண்டராமர் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தொலைவிலேயே உள்ளது ஸ்ரீகோதண்டராமர் ஆலயம். ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ.. . .
'நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம் ஏந்து பெருமை
ராமனை' என்றார் பெரியாழ்வார்.
ராமர் திருமாலின் அவதாரமாயினும், மனிதனாகவே பூவுலகில் வாழ்ந்தவர். அன்று ராமரின் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு வடிவைக்
காணும் பேறு பெற்றவர்கள் கவுசல்யா, ஆஞ்சனேயர்,திரிசடை, ராவணன் மற்றும் மண்டோதரி ஆவர்.
ராமர் வனவாசம் செல்லும் முன் கவுசல்யா அப்பாக்கியம் பெற்றார்.
ஆஞ்சனேயர் ராமபிரானை சந்தித்த முதல் சந்திப்பில் அப்பேறு பெற்றார்.
திரிசடைக்கோ அவள் கனவில் தோன்றி அருள் நல்கினார். ராமாயணப்போர்
முடிவில் மன்டோதரிக்கும், ராவணனுக்கும் விஷ்ணு தரிசனம் தந்தார் ராமர்.
COMMENT(S): 5
Jai sri ram
ஜெய ராம் ஜெய ராம்
'நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம் ஏந்து பெருமை
ராமனை' என்றார் பெரியாழ்வார்.
ராமர் திருமாலின் அவதாரமாயினும், மனிதனாகவே பூவுலகில் வாழ்ந்தவர். அன்று ராமரின் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு வடிவைக்
காணும் பேறு பெற்றவர்கள் கவுசல்யா, ஆஞ்சனேயர்,திரிசடை, ராவணன் மற்றும் மண்டோதரி ஆவர்.
ராமர் வனவாசம் செல்லும் முன் கவுசல்யா அப்பாக்கியம் பெற்றார்.
ஆஞ்சனேயர் ராமபிரானை சந்தித்த முதல் சந்திப்பில் அப்பேறு பெற்றார்.
திரிசடைக்கோ அவள் கனவில் தோன்றி அருள் நல்கினார். ராமாயணப்போர்
முடிவில் மன்டோதரிக்கும், ராவணனுக்கும் விஷ்ணு தரிசனம் தந்தார் ராமர்.
நாமும் சதுர்புஜ ராமரை வழிபட்டு நற்கதி பெறுவோம்.
எல். கண்ணன், சென்னை.
ஹரே க்ருஷ்னா ஹரே க்ருஷ்னா க்ருஷ்னா க்ருஷ்னா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
Unable to read in iPad , add to library not appearing still showing as preview